கோமாளி

என் முகத்தைப் பற்றி
இனியும் யோசிக்காதீர்கள்
சற்றே சிதைந்திருக்கிறது
ஏமாற்ற விரும்பவில்லை அதனால்தான்
கோமாளியின்
முகமூடி அணிந்திருக்கிறேன்
தோல்விகளைத் துவைத்துப் போட்ட சட்டையில்
கிழிசல்கள் இருக்கத்தானே செய்யும்..
எனக்குள் புதைந்திருக்கும் ஆயிரம் கத்திகளை
எப்போது வேண்டுமென்றாலும் வீசுவேன்..
அழுகைகளை அடர்த்தியாக்கி
அமிலமாக அடைத்து வைத்திருக்கிறேன்...
நீங்கள் எப்போதுமே
வேஷத்தை விரும்புகிறவர்கள்...
அடைத்து வைத்தது வெடிக்கும் போது
கோமாளி
சிரித்துக் கொண்டே நடந்து கொண்டிருப்பான்....
நீங்கள் பயத்தோடு
நடுங்கிக் கொண்டிருப்பீர்கள்....
இனியும் வருவேன்...
- மு.முகமது பாட்சா*
13/10/2019

காந்தியின் மரணம் பற்றிய சந்தேகங்கள்
எழுந்துள்ளன
காந்தி எப்படி இறந்திருப்பார்?
கோட்சே சுட்டுவிட்டான் என்பது
நிரூபணமில்லாத உண்மை என்று அச்சிட்டபிறகு
சாம்பலைக் கிளறிக் கொண்டிருக்கிறோம்
தூக்கிட்டுத்தான்
தற்கொலை செய்து கொண்டார் என்று
அவர் பிறந்த ஊரில் பேசிக் கொள்கிறார்கள்...
மது விடுதியில்
சண்டையிட்டதால் இறந்திருக்கலாம் என்று
போதையில் சங்கியொருவன் பேசிவிட்டுப் போகிறான்...
காந்தி சாகவில்லை என்று
ஒரு கதர் குல்லா நம்பிக் கொண்டிருக்கிறார்..
காந்தியை சாகடிப்பது எப்படியென்று
இன்னமும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்..
காந்தியை தேசத் துரோகி என்று அறிவிக்க
ஆவணங்களைத் தேடிக் கொண்டிருந்த போதுதான்
அவர் இந்தியாவை விட்டே ஓடிவிட்டதாகக்
கல்விப் புத்தகங்களில்
திருத்தங்கள் செய்து கொண்டிருந்தார்கள்.
- மு.முகமது பாட்சா*
13/10/2019

அந்தக் கவிதை
புதிய பயணத்தைத் தொடங்கியிருந்தது
நேர்த்தியில் எழுத்துகளைக் கோர்த்து
பட்டாடையாகப்
பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு அழகு பார்த்தது..
மனதை நெய்வதற்கு
படிமங்களைத் தொட்டுத் துலக்கியிருந்தான் கவிஞன்
பளபளப்பில்
கடலை அடைத்து வாசித்தவர்கள்
மீன்களாகவே நீந்திக் கொண்டிருந்தார்கள்...
குவிந்த வாழ்த்துகளைக்
கோபுரமாக்கி உட்கார்ந்து கொள்ள வேண்டியவன்
கவிதையின் கீழ்
அடுத்த கவிதைக்கு ஆழ்ந்திருக்கும்
புத்தனைப் போல் உறங்கிக் கொண்டிருந்தான்...
அதனைச் சிலர்
அவன் பெயரென்று சொல்லிவிட்டு நகர்ந்தார்கள்...
நானும் கூட இப்போது
அவனைத் தேடித்தான் பயணிக்கிறேன்
என் அடுத்த கவிதைக்கு
சில வார்த்தைகளை வாங்கிவர.
- மு.முகமது பாட்சா*
14/10/2019

என் முகத்தைப் பற்றி
இனியும் யோசிக்காதீர்கள்
சற்றே சிதைந்திருக்கிறது
ஏமாற்ற விரும்பவில்லை அதனால்தான்
கோமாளியின்
முகமூடி அணிந்திருக்கிறேன்
தோல்விகளைத் துவைத்துப் போட்ட சட்டையில்
கிழிசல்கள் இருக்கத்தானே செய்யும்..
எனக்குள் புதைந்திருக்கும் ஆயிரம் கத்திகளை
எப்போது வேண்டுமென்றாலும் வீசுவேன்..
அழுகைகளை அடர்த்தியாக்கி
அமிலமாக அடைத்து வைத்திருக்கிறேன்...
நீங்கள் எப்போதுமே
வேஷத்தை விரும்புகிறவர்கள்...
அடைத்து வைத்தது வெடிக்கும் போது
கோமாளி
சிரித்துக் கொண்டே நடந்து கொண்டிருப்பான்....
நீங்கள் பயத்தோடு
நடுங்கிக் கொண்டிருப்பீர்கள்....
இனியும் வருவேன்...
- மு.முகமது பாட்சா*
13/10/2019

காந்தியின் மரணம் பற்றிய சந்தேகங்கள்
எழுந்துள்ளன
காந்தி எப்படி இறந்திருப்பார்?
கோட்சே சுட்டுவிட்டான் என்பது
நிரூபணமில்லாத உண்மை என்று அச்சிட்டபிறகு
சாம்பலைக் கிளறிக் கொண்டிருக்கிறோம்
தூக்கிட்டுத்தான்
தற்கொலை செய்து கொண்டார் என்று
அவர் பிறந்த ஊரில் பேசிக் கொள்கிறார்கள்...
மது விடுதியில்
சண்டையிட்டதால் இறந்திருக்கலாம் என்று
போதையில் சங்கியொருவன் பேசிவிட்டுப் போகிறான்...
காந்தி சாகவில்லை என்று
ஒரு கதர் குல்லா நம்பிக் கொண்டிருக்கிறார்..
காந்தியை சாகடிப்பது எப்படியென்று
இன்னமும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்..
காந்தியை தேசத் துரோகி என்று அறிவிக்க
ஆவணங்களைத் தேடிக் கொண்டிருந்த போதுதான்
அவர் இந்தியாவை விட்டே ஓடிவிட்டதாகக்
கல்விப் புத்தகங்களில்
திருத்தங்கள் செய்து கொண்டிருந்தார்கள்.
- மு.முகமது பாட்சா*
13/10/2019

அந்தக் கவிதை
புதிய பயணத்தைத் தொடங்கியிருந்தது
நேர்த்தியில் எழுத்துகளைக் கோர்த்து
பட்டாடையாகப்
பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட்டு அழகு பார்த்தது..
மனதை நெய்வதற்கு
படிமங்களைத் தொட்டுத் துலக்கியிருந்தான் கவிஞன்
பளபளப்பில்
கடலை அடைத்து வாசித்தவர்கள்
மீன்களாகவே நீந்திக் கொண்டிருந்தார்கள்...
குவிந்த வாழ்த்துகளைக்
கோபுரமாக்கி உட்கார்ந்து கொள்ள வேண்டியவன்
கவிதையின் கீழ்
அடுத்த கவிதைக்கு ஆழ்ந்திருக்கும்
புத்தனைப் போல் உறங்கிக் கொண்டிருந்தான்...
அதனைச் சிலர்
அவன் பெயரென்று சொல்லிவிட்டு நகர்ந்தார்கள்...
நானும் கூட இப்போது
அவனைத் தேடித்தான் பயணிக்கிறேன்
என் அடுத்த கவிதைக்கு
சில வார்த்தைகளை வாங்கிவர.
- மு.முகமது பாட்சா*
14/10/2019
No comments:
Post a Comment