
யாராவது இருக்கிறீர்களா?
கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தான்
இடியில் மழை பளிச்சிட்டது
அவள் என்பவள் கதவைத் திறந்தாள்
புன்னகை உள்ளே வரச்சொல்லி அழைத்தது
இரவாடைத் தளர்வில்
வழிந்தது யெவனப் பிரதேசங்கள்...
இப்போதுதான் பசியாறினேன் என்றவள்
கைகளைக் கழுவச் சென்றால்
விரல்களில் பச்சை இரத்தம் பசப்பியிருந்தது
அமானுஷ்யம் கண்களை உருட்டிப் பார்க்க..
அவளின் நிழல் இறந்து கிடந்தது
சன்னலின் வழி நிலவு அழுவதாகத் தெரிய
எதிரிலமர்ந்தவள்
ஆடைகளைத் தளர்த்தி ' தெரிகிறதா' என்றாள்
அவளின் இதழ்க்கடை வழியே
புழுவொன்று நெளிந்து போக
அதனைப் பிடித்து வாயில் போட்டுக் கொண்டாள்...
அவனுக்குக் குமட்டியது...
அருகில் நெருங்கி மூச்சுக் காற்றைச் சூடாக்கினாள்
திரைச்சீலை எரிந்து கொண்டிருந்தது..
அலறியடித்து ஓடும் போது
தவறி விழுந்த மதுக்குடுவையில் அவள் சிரிக்க...
தண்ணீரைத் தெளித்தவள்
ஹேங்க் ஓவரில் அலறுவதே வேலையென்று
உள்ளே சென்றாள்...
- மு.முகமது பாட்சா*
15/10/2019
No comments:
Post a Comment