
புல்லாங்குழலின் இசையோடு நகர்கிறேன்
சுரக் கூட்டில் மூச்சுக்காற்று நிறைகிறது
சொற்கட்டுகளில்தான் எத்துணை ஜதிகள்?
நிழற்பிரியா மேகங்கள்
நிர்மூல வானத்தில் படுக்கை....
அசமந்த வானத்தில் விரிகிறது கனவுகள்
காற்றின் பிறப்பிடம் யாருக்குத் தெரியும்?
சுவாசத்தை நெய்யாமல்
பிரபஞ்சம் விரிவதில்லை...
சலபங்களின் பாட்டை யாராவது கேட்டீர்களா?
அதனிசையுருக்கில் மேகங்கள் வழிகிறது
மழை வரட்டும்
என்னிசையை அஃது எங்காவது சுமந்து செல்லும்.
- மு.முகமது பாட்சா*
01 /11 /2018





















