கரைவேட்டிகள்

நாங்கள் வரலாற்றோடு வாழ்கிறோம்
நீங்கள்
வரலாற்றை மறந்துவிட்டுப் பேசுகிறீர்கள்...
நீங்கள் இந்து படித்தபோது
நாங்கள் டீக்கடைகளில்
அரசியல் பேசிக் கொண்டிருந்தோம்
வெறும் பேச்சு வெள்ளை வேட்டியென்று
எங்களை இகழ்ந்தீர்கள்....
நீங்கள் ஒதுக்கிய பார்பர் கடைகள்தான்
நாங்கள் பயின்ற அரசியல் பள்ளிக் கூடங்கள்...
இப்போது எங்களை
கரை வேட்டியென்று எள்ளுகிறீர்கள்...
இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு
நடக்கச் சொன்னீர்கள்....
நாங்கள் துண்டை தோளில் போட்டுக் கொண்டு
நடந்து சென்றோம்
கரை வேட்டிகளை கட்டி
நாங்கள் நடந்த போதுதானே நீங்கள்
நவத்துவாரங்களையும்
நாசூக்காக மூடிக் கொண்டீர்கள்?
அம்பேத்கரின்
கோட்டிற்குப் பின்னால் இருக்கும் வரலாறுதான்
எங்களின் கரை வேட்டிகளுக்கும் இருக்கிறது...
நாங்கள் வரலாற்றோடு வாழ்கிறோம்
நீங்கள்
வரலாற்றை மறந்துவிட்டுப் பேசுகிறீர்கள்..
- மு.முகமது பாட்சா*
03/10/2019

எதையோ
தேடிக் கொண்டிருந்த கிழவரிடம்
எதைத் தேடுகிறீர்களென
அன்புடன் கேட்டாள் அந்தச் சிறுமி...
உனது புன்னகையில் ஒளிந்திருக்கும்
எனது கடந்த காலம் என்றார்...
இருட்டில் தேடினால்
கிடைக்கலாம் என்றவள்
பகலில் தேடுவது பறவைகளின்
ஞானம் மட்டுமே என்று சிரித்தவள்...
தன் பெயரை ராபியத்துல் பஸ்ரியா
என்று சொல்லிவிட்டு ஓடினாள்.
- நட்புடன்....முகமது பாட்சா*
04/10/2019

நாங்கள் வரலாற்றோடு வாழ்கிறோம்
நீங்கள்
வரலாற்றை மறந்துவிட்டுப் பேசுகிறீர்கள்...
நீங்கள் இந்து படித்தபோது
நாங்கள் டீக்கடைகளில்
அரசியல் பேசிக் கொண்டிருந்தோம்
வெறும் பேச்சு வெள்ளை வேட்டியென்று
எங்களை இகழ்ந்தீர்கள்....
நீங்கள் ஒதுக்கிய பார்பர் கடைகள்தான்
நாங்கள் பயின்ற அரசியல் பள்ளிக் கூடங்கள்...
இப்போது எங்களை
கரை வேட்டியென்று எள்ளுகிறீர்கள்...
இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு
நடக்கச் சொன்னீர்கள்....
நாங்கள் துண்டை தோளில் போட்டுக் கொண்டு
நடந்து சென்றோம்
கரை வேட்டிகளை கட்டி
நாங்கள் நடந்த போதுதானே நீங்கள்
நவத்துவாரங்களையும்
நாசூக்காக மூடிக் கொண்டீர்கள்?
அம்பேத்கரின்
கோட்டிற்குப் பின்னால் இருக்கும் வரலாறுதான்
எங்களின் கரை வேட்டிகளுக்கும் இருக்கிறது...
நாங்கள் வரலாற்றோடு வாழ்கிறோம்
நீங்கள்
வரலாற்றை மறந்துவிட்டுப் பேசுகிறீர்கள்..
- மு.முகமது பாட்சா*
03/10/2019

எதையோ
தேடிக் கொண்டிருந்த கிழவரிடம்
எதைத் தேடுகிறீர்களென
அன்புடன் கேட்டாள் அந்தச் சிறுமி...
உனது புன்னகையில் ஒளிந்திருக்கும்
எனது கடந்த காலம் என்றார்...
இருட்டில் தேடினால்
கிடைக்கலாம் என்றவள்
பகலில் தேடுவது பறவைகளின்
ஞானம் மட்டுமே என்று சிரித்தவள்...
தன் பெயரை ராபியத்துல் பஸ்ரியா
என்று சொல்லிவிட்டு ஓடினாள்.
- நட்புடன்....முகமது பாட்சா*
04/10/2019
No comments:
Post a Comment