
சுவர் வெள்ளையாகத்தான் இருந்தது
அதிலொருவன்
சிறு நீரையாட்டி ஓவியம் என்று ரசித்தான்
சாணியடித்தவன் அற்புதமென்றான்
சாதிக்கான பெயரையெழுதி
சங்கத்திற்கு ஒருவன் உரிமை கொண்டான்
காதல் கிறுக்கன்
ஹாட்டினுக்குள் அம்பை விட்டு
காதலிக்குத் தூதுவிட்டான்
ஓட்டுக் கேட்பவன்
கைக்கூப்பிச் சிரித்துக் கொண்டிருந்தான்
போராட்டக்காரன் புரட்சி எழுதினான்
இறந்தவர் செய்தியொன்று சுவரை ஒட்டிக்கொள்ள...
வீட்டிற்குப் பாதுகாப்பாய்
அங்கேயே நிற்கிறது அந்தச் சுவர்.
- முகமது பாட்சா*
05/11/2019
No comments:
Post a Comment