
மௌனத்தைத் தின்றவன்
அறையைவிட்டு வெளியேறுகிறான்...
அவனைச் சுற்றிலும்
வெப்பம் கழன்று எரிந்து கொண்டிருக்க...
இரவுகளைத் தின்றும் சீரணிக்காத மௌனம்
சதைகளை மென்று ருசிப் பார்க்கிறது...
அவன் இவன்தான்
என்று சிலர் சப்தமெழுப்புகிறார்கள்....
கண்களையுருட்டி
கால்களையகட்டி ருத்ரமாடும் அஃது
அவன் மீதேறி
உதிரத்தை உறிஞ்சிக் குடிக்கும் போதும்
கண்ணீர்த் துளிகளுடன் மட்டுமே
நடந்து சென்று கொண்டிருக்கிறான்...
உள் மனம் எப்போதோ இறந்துவிட்டிருந்தது.
- முகமது பாட்சா*
07/11/2019
No comments:
Post a Comment