
நாவலொன்றை எழுத எத்தனிக்கிறேன்
முன்பாகச் சில குறிப்புகள்
என்னை எழுத முற்படுகின்றன
துரோகமொன்று
'என்னை விட்டுவிடாதே' என முந்துகிறது
என்றோ இறந்து போனவள் 'என்னை
மறக்கவில்லையே' என்று கேட்டழுகிறாள்
பால்யம் தலைகாட்டி
'நான் உன் நிழல்' என்று அலட்டிக் கொள்கிறது
விட்டுத் தொலைந்த வீடு
'மீண்டும் கட்டுவாயா?' எனக் கேட்க..
எழுதாத பாவமொன்று
' நான் தொடர்வேன் ' என்று மிரட்டுகிறது...
எழுதும் முன்பாகத்
தட்டச்சும் விரலொன்றில் சிறு வீக்கம்
வின்னென்று வலிக்க...
நிரப்பப்படாத பக்கங்களால்
நாவலும் நானும் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
- முகமது பாட்சா*
06/11/2019
No comments:
Post a Comment