கடலுக்குத் தடை போட்டுவிட்டு
நதிகளுக்கு வழிவிடவேண்டும் என்று
மசோதா நிறைவேறுகிறது...
பூமிக்குள் புதைந்த வேர்கள் எல்லைகளைக் கடந்து
ஊடுருவுகின்றன...
நிலத்தின்
அடித்தட்டுகளில் எல்லை வகுக்கச் சென்றவர்கள்
நிழல்களை மட்டுமே
மிச்சமாய் விட்டுச் செல்கிறார்கள்...
யாம கோடாங்கி எலும்புகளில் நீறு பூசி
எலுமிச்சை பழங்களால்
அண்டத்தை அடக்க முயல்கிறான்...
ஆங்காரி தன்னுடலை முறுக்கிப் பிழியும் சாற்றில்
கடல் மூச்சு வாங்க...
நதிகளின் மேல் வீசுகின்ற காற்று
வேகத்தைக் கூட்டி விரசாக நடக்கின்றன...
சற்றுமுன் வாசித்துக் கொண்டிருந்த வானிலை அறிக்கை
நிறுத்தப்பட்டிருக்கிறது
இணைப்புகள் எதுவும் கிடைக்காமல்.
- முகமது பாட்சா*
12/12/2019
அஸர் பாங்கிற்கு
அள்ளிக் கட்டிய ஒளுவோடு
மக்ரீப் தொழுகைக்கும்
திக்ரில் காத்திருந்தவளின் கல்பில்
வேகமாகக்
காரோட்டிக் கொண்டிருக்கிறான் கணவன்...
வாழ்க்கையின் நிமித்தங்கள்
அலங்காரம் பூசிய வீட்டில் உலாவுகின்றன
வெறிச்சோடிக் கிடக்கும் சோபாக்கள் முழுவதும்
விளையாடக் குழந்தையின்றித் தவிக்க
ஊத் வாசம் நிறைக்கிறது
அடுத்தச் சபருக்கு இரண்டு ஆண்டுகள்
வெதும்பலோடு காத்திருப்பது...
யார் கண்ணிற்கும் தெரியாமல்
அவளுக்கென்ன? என்ற
வார்த்தைகளால் நிறைகிறது காலம்.
- முகமது பாட்சா*
12/12/2019
எரிகின்ற தீயில்
எச்சிலைத் துப்பிவிட்டு
அணைந்ததாகப் பாவனைக் காட்டுகிறார்கள்...
கலவரம் உரிமைகளுக்கான கட்டமைப்பு...
கால்களை வெட்டிவிட்டு
நடந்து வா என்கின்றவனை
பற்களால் கூடக் கடிக்கவில்லையென்றால்
மூளையென்பது
மூத்திரக் குழம்பிலூறியிருக்கும் களி மண்...
தலையை வருடுகிறவன்
தந்தையென்றாலும் எச்சரிக்கை அவசியம்..
புத்தனென்றாலும்
போதி மரம் வெட்டுப்பட்டால் கோபம்
கண்களில் ஆட்சி செய்யும்...
பயம் விதைக்கப் படுவது
உரம் உள்ளத்திலிருந்து கிளர்ந்து எழுவது..
தோட்டாக்களில்லாத
துப்பாக்கிகளாய் இருப்பதைவிட
அடுப்பில் எரிகின்ற
விறகாகவாவது இருந்துவிடு!
- முகமது பாட்சா*
13/12/2019
விடுபட்ட வார்த்தைகளையெல்லாம்
ஒன்றுபடுத்திச் சீராக்கினான்
தொலைந்து போன வார்த்தைகளைத்
தேடிக் கொண்டேயிருந்தது
சிந்தனையின் நரம்புகள்
போராட்டத்தில்
காதலையூற்றிக் கலக்கியதில்
எழுத்துகள் இடம் மாறிக்கொண்டன
தத்துவத்தைச் சேர்த்துக் குலுக்கியவனுக்கு
மிச்சமாய்க் கிடைத்தது வெள்ளைத்தாள்
தாவரங்களைக் கசக்கி ஊற்றினான்
வேர்கள் பறவைகளைத்தேடிப் பயணப்பட்டன...
கவிதையென்பது யாதெனில்?
ஆளாளுக்கு
மேடைகளை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்
வார்த்தைகளை உதறி நடந்து செல்கிறான்
வார்த்தைகள் சூழ்ந்து
அவனைத் திண்ணத் தொடங்கின...
- முகமது பாட்சா*
13/12/2019
பிரபஞ்ச ரேகைகளின்
இடைவெளிகளைக் கறையான்கள்
இட்டு நிரப்பும் கள்ளத்தன வழித்தடத்தில்
எலும்புகளைப் பொறுக்கிவைத்துத்
தந்திரம் செய்யும் மாயகனின்
விலா எலும்பிலிருந்து எழும் பெரும் தீ
அழிக்கும் உத்தரவிற்குக் காத்திருக்க,
கதம்பைக் கயிற்றினைக் கொண்டு
எறும்புகள் இழுக்கும் தோரணையில் விழுகின்ற
பெரு மழையில் நழுவும் கந்தகத்துப் பூமி
விழுங்கிச் செரிக்கும் நாளில்
விடியல் பாட்டெழுதக் காத்திருக்கும்
கூட்டிலொரு புழுவாய் துடிக்கும்
மனதின் வேட்கை போதும் அறம் செழிக்க!
- முகமது பாட்சா*
14/12/2019
நிறைவேற்ற முடியாத
சொல்லொன்றில் உட்கார்ந்து கொண்டு
பயணம் செய்வது
அத்துணைச் சுலபமல்ல...
சன்னலைத் திறந்து வைத்தாலும்
காற்று உள்ளே வராது
வாசற்கதவு
தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருக்கும்...
கவ்வியிருக்கும் சூழல்
காலைவிட்டுக் கழலும் வரை அவத்தை...
பிடியிலிருந்து நழுவிய
அவ் வார்த்தைகளைச்
சபித்துக் கொண்டிருக்கிறேன்
அச் சொல் இப்போது எனக்கு
முதன் முறையாகப்
பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது!
- முகமது பாட்சா*
14/12/2019
சன்னல் கதவுகள்
அடித்துக் கொண்டேயிருக்கின்றன
வீட்டில்
யாராவது இருக்கிறீர்களா?
எதிரெதிர் சன்னல்கள்
திறந்திருக்கின்றன
காதல் காற்று மெல்ல வீசுகின்றது...
பாழடைந்த சன்னல்கள்
காத்திருக்கின்றன
பழைய மரக்கடையில்...
யாராவது வருவார்களா?
மூடிக்கிடக்கும்
சன்னலின் உட்புறம்
முதியவளின் மூச்சுக்காற்று
இரைத்துக் கொண்டிருக்கிறது...
திறந்து வைத்த சன்னலில்
பார்வைகளை வீசிவிட்டு
வார்த்தைகளைத்
தூண்டில் போட்டுப் பிடிக்கிறான்...
சாத்திவைத்த சன்னலில்
மெதுவாக வெளியேறுகிறது முனகல்
பசியெடுத்தவன்
சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்...
சன்னல் கதவுகள்
அடித்துக் கொண்டேயிருக்கின்றன
வீட்டில்
யாராவது இருக்கிறீர்களா?
- முகமது பாட்சா*
15/12/2019
அன்பிற்குரிய அறிவிலி அரக்கனே
நாங்கள் என்றுமே
போராடுவதற்காகத்தான் பிறந்திருக்கிறோம்
விந்துவாய் நுழைந்த போராட்டம்
கருவாய் உருண்டதை
நீ பிண்டத்தின்
அடக்கம் என்று எடுத்துக் கொள்கிறாய்...
எட்டி உதைத்து எம்பி வெளிவந்ததில்
எம் தாய் கத்தி அழுததை
இயலாமையென நினைக்கிறாய் அறிவிலியே...
முட்டிக் கடித்துத்தான் பாலையே
நாங்கள் முலைகளில்
எட்டிக் குடித்தோம் என்பதை அறிவாயா!
கத்தியழுதே உணவினைத் தேடினோம்...
தொட்டில் மழலையாய் இருந்திடாமல்
ஒட்டி ஒருக்களித்து
முட்டியிட்டு சுவர் பிடித்து நடந்தவர்களுக்கா
பாடம் நடத்துகிறாய்?
தாய் பெற்றவலி அறியாதவன்
செத்த எலி என்பது எங்களுக்கும் தெரியும்...
போராட்டம் புதிதல்ல
அறிவிலியே...
சாகாதவன் இங்கு எவனும் இல்லை...
- முகமது பாட்சா*
16/12/2019
இந்த முறையாவது
என்னை நிறைவாக்கி விடவேண்டும்
விம்பங்களாகச் சிதைந்திருக்கிறேன்
கனவொன்றில்
என்னைப் பார்த்தாகச் சொன்னவன்
நீர்மையாக இருந்ததாகச் சொல்கிறான்..
என்னுள் நீந்துகின்ற மீன்கள் குருடானவை
மோப்பத்தை வைத்துக் கொண்டு
வளைந்து நெளிந்து வாசம் செய்கின்றன...
நானொரு பாடகனும் கூட
வாயசைவுகளில் ராகத்தைப் பிரியுங்கள்...
கேட்கவில்லையென்றால்
அஃது உங்களின் குறை...
சாகரத்தின் மௌனத்தைப் போதியில் தேடுவதுபோல்
தேடிக் கொண்டிருக்கிறீர்கள்
அலைகளிடம் நுரைத்து மூச்சு விடுகிறேன்..
நீங்கள் குறையுடன் தேடுகிறீர்கள்...
பாடல்
ஊமையின் சங்கீதமாக அழுந்துகிறது...
- முகமது பாட்சா*
16/12/2019
விரல்களை உயர்த்தாத வரை
குரல்வளைகள் நசுங்கியே கிடக்கும்...
மௌனம் என்பது
செத்துப்போன மொழி வேலைக்கு ஆகாது...
அதிகாரன் என்பவன்
ஒருவகையான பூச்சாண்டி...
நாம் அழிகின்ற போது அவனும்
அரக்கு மாளிகையில் இறந்து கிடப்பான்...
கால்களென்பது நடப்பதற்கு
மட்டுமல்ல எட்டியுதைக்கவும்தான்...
உரிமை உடலோடு
நழுவிக் கொண்டு கழலாது...
மண்ணின் பாசம் வாளெடுத்துச் சுழற்றும்...
அப்பன் பூமி இதுவென்று ஆர்ப்பரிக்கும்...
பேசுகிற நேரத்தில் பேசாதவன்
கால்களை முன் வைக்கிறான்
சங்கிலிகளில் பிணைத்துக் கொள்ள...
இருட்டறை
இமைகளுக்குள்தான் இருக்கிறது...
வெளிச்சம் வேண்டுமென்றால்
விழித் திறந்து பார்ப்பதும் அவசியம்....
- முகமது பாட்சா*
17/12/2019
CAB என்ற
கறையானைத் தேசமெங்கும் தூவிவிட்டு
உரம் இறைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்
அடிமை விசுவாசிகள்
என்றுமே அடிமைகளென்பதால்
நாக்குகள் புழுக்களைப்போல் நெளிகின்றன
குஜராத்தில் குலமறுத்தவர்கள்
குடியாட்சியில் விஷம் கலக்குகிறார்கள்...
NRC என்ற நச்சுப் பாம்பு
நாக்கைத் துழாவிக் கொண்டேயிருக்கிறது...
பாம்பைப் பிடிக்கத்தான் போராட்டம்
சாத்தான் கழுத்தில்
சுற்றிக் கொண்டு கடவுளென்கிறான்...
தேசம் உணர்வின் மொழி
கை கோர்த்துவிட்டால் கலங்க மாட்டோம்...
அதுவரை நீ
மதுக்குடுவையில் ஊர்ந்து கொண்டேயிரு!
- முகமது பாட்சா*
17/12/2019
சாத்தான் தன் கால்களை
இப்போது அகல வைத்திருக்கிறான்...
அவனுக்கு எப்போதுமே நரியின் கண்கள்
ஓ நாயின் வாய்...
சபிக்கப்பட்டவனின் ரோமங்கள்
நரகலின் புழுக்கள்....
ஆதாமின் தோட்டம் இப்போது
துஷ்ட ஜின்களால் நிரம்பியிருக்கிறது...
நோவாவின் படகில்
ஓட்டையிடத் துடிக்கிறது அவனது பற்கள்
மூசாவின் ஆசாவைத் திருடிவிட்டதாக
எக்களிக்கிறான்....
ஈசாவின் கண்ணீரை
ஒயினென்று ரசித்து மிடறுவதை...
காபாவின் கண்கள் கவனித்துக் கொண்டிருக்கிறது...
உண்மையில் அவனொரு
அபாபில் பறவைகளை மிரட்டுகின்ற
அற்ப புழுவென்று யாருக்கும் தெரியாது!
- முகமது பாட்சா*
18/12/2019
காம முத்திரைகளுக்குப்
பொழிப்புரையொன்றை எழுதிவிட்டு
காதல் கடிதம் என்கிறாய்
நான்கு சுவர்கள் பற்றியெரிகின்ற போது
முனங்கலின் தீக்கு
எப்படி விளக்கவுரை எழுதுவேன்?...
அஞ்சனம் தீட்டிய விழிகள்
இடையில் விழுவதற்கான அம்புகள்...
எதிரிகளை வீழ்த்த
இவற்றையா எடுத்துச் செல்ல முடியும்?
- முகமது பாட்சா*
18/12/2019
நிறைந்திருக்கும் கற்களிடையே
கழுவிலேற்ற
அகலிகையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்...
பித்துப் பிடித்தது போல்
கண்ணகி அலைந்து கொண்டிருக்கிறாள்...
மதுரை எரிவதில் உடன்பாடில்லை...
கனவுகளைப் பத்திரமாக அடைப்பதற்கு
சுவர்கள் உயரமாக எழும்புகின்றன....
நரியோடு வலம் வருகிறான் சாணக்கியன்
அரசன் அவனது உச்சி மண்டையில்
ஆடிக் கொண்டிருக்கிறான்...
காலத்தைப் புதைத்து
காலத்தை மீட்பதாகக் காலதேவன் உரை...
உருகும் பனிமலையில்
எல்லைகள் சுருங்குகின்றன...
எலும்புகளைத் தோண்டி ஆய்கிறார்கள்...
டி.என்.ஏ வில்
மதங்களுக்கான வாய்ப்பாடு கிடைக்கவில்லை...
- முகமது பாட்சா*
19/12/2019
அவர்கள் கூடிக்கூடிப் பேசுகிறார்கள்
ஒரு மரத்தை வெட்டுவதைப் பற்றிதான்
அந்தப் பேச்சு நீள்கிறது
உயிரற்றதாக்கி விட்டால் தளிர்கள்
பிராணவாயு இல்லாமல் இறந்து போகும்
எனக் கணிக்கிறார்கள்
திராவகம் ஊற்றினால் மொத்தத்தில்
பட்டுப் போகலாம் என்றும் பேச்சு நுழைகிறது
அந்த மரம் ஆவேசமாகத்
தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறது..
பறவைகள் தங்களின் வம்சத்தைக் கூட்டி
அவர்களை விரட்டுகின்றன
அடர் மழைக்கு வனம் தயாராகும் போது
எரிப்பதைப் பற்றி ஒருவன்
பேசிக் கொண்டு ஓடி வருகிறான்...
ஆணி வேர் அதன் ஆழத்தை தீர்மானிக்கக்
கிளை விரித்துப் பரவும் வேர்களால்
தேசம் முழுமைக்கும் எரிதழல் வீச்சம்.
- முகமது பாட்சா*
19/12/2019
நதிகளுக்கு வழிவிடவேண்டும் என்று
மசோதா நிறைவேறுகிறது...
பூமிக்குள் புதைந்த வேர்கள் எல்லைகளைக் கடந்து
ஊடுருவுகின்றன...
நிலத்தின்
அடித்தட்டுகளில் எல்லை வகுக்கச் சென்றவர்கள்
நிழல்களை மட்டுமே
மிச்சமாய் விட்டுச் செல்கிறார்கள்...
யாம கோடாங்கி எலும்புகளில் நீறு பூசி
எலுமிச்சை பழங்களால்
அண்டத்தை அடக்க முயல்கிறான்...
ஆங்காரி தன்னுடலை முறுக்கிப் பிழியும் சாற்றில்
கடல் மூச்சு வாங்க...
நதிகளின் மேல் வீசுகின்ற காற்று
வேகத்தைக் கூட்டி விரசாக நடக்கின்றன...
சற்றுமுன் வாசித்துக் கொண்டிருந்த வானிலை அறிக்கை
நிறுத்தப்பட்டிருக்கிறது
இணைப்புகள் எதுவும் கிடைக்காமல்.
- முகமது பாட்சா*
12/12/2019
அஸர் பாங்கிற்கு
அள்ளிக் கட்டிய ஒளுவோடு
மக்ரீப் தொழுகைக்கும்
திக்ரில் காத்திருந்தவளின் கல்பில்
வேகமாகக்
காரோட்டிக் கொண்டிருக்கிறான் கணவன்...
வாழ்க்கையின் நிமித்தங்கள்
அலங்காரம் பூசிய வீட்டில் உலாவுகின்றன
வெறிச்சோடிக் கிடக்கும் சோபாக்கள் முழுவதும்
விளையாடக் குழந்தையின்றித் தவிக்க
ஊத் வாசம் நிறைக்கிறது
அடுத்தச் சபருக்கு இரண்டு ஆண்டுகள்
வெதும்பலோடு காத்திருப்பது...
யார் கண்ணிற்கும் தெரியாமல்
அவளுக்கென்ன? என்ற
வார்த்தைகளால் நிறைகிறது காலம்.
- முகமது பாட்சா*
12/12/2019
எரிகின்ற தீயில்
எச்சிலைத் துப்பிவிட்டு
அணைந்ததாகப் பாவனைக் காட்டுகிறார்கள்...
கலவரம் உரிமைகளுக்கான கட்டமைப்பு...
கால்களை வெட்டிவிட்டு
நடந்து வா என்கின்றவனை
பற்களால் கூடக் கடிக்கவில்லையென்றால்
மூளையென்பது
மூத்திரக் குழம்பிலூறியிருக்கும் களி மண்...
தலையை வருடுகிறவன்
தந்தையென்றாலும் எச்சரிக்கை அவசியம்..
புத்தனென்றாலும்
போதி மரம் வெட்டுப்பட்டால் கோபம்
கண்களில் ஆட்சி செய்யும்...
பயம் விதைக்கப் படுவது
உரம் உள்ளத்திலிருந்து கிளர்ந்து எழுவது..
தோட்டாக்களில்லாத
துப்பாக்கிகளாய் இருப்பதைவிட
அடுப்பில் எரிகின்ற
விறகாகவாவது இருந்துவிடு!
- முகமது பாட்சா*
13/12/2019
விடுபட்ட வார்த்தைகளையெல்லாம்
ஒன்றுபடுத்திச் சீராக்கினான்
தொலைந்து போன வார்த்தைகளைத்
தேடிக் கொண்டேயிருந்தது
சிந்தனையின் நரம்புகள்
போராட்டத்தில்
காதலையூற்றிக் கலக்கியதில்
எழுத்துகள் இடம் மாறிக்கொண்டன
தத்துவத்தைச் சேர்த்துக் குலுக்கியவனுக்கு
மிச்சமாய்க் கிடைத்தது வெள்ளைத்தாள்
தாவரங்களைக் கசக்கி ஊற்றினான்
வேர்கள் பறவைகளைத்தேடிப் பயணப்பட்டன...
கவிதையென்பது யாதெனில்?
ஆளாளுக்கு
மேடைகளை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்
வார்த்தைகளை உதறி நடந்து செல்கிறான்
வார்த்தைகள் சூழ்ந்து
அவனைத் திண்ணத் தொடங்கின...
- முகமது பாட்சா*
13/12/2019
பிரபஞ்ச ரேகைகளின்
இடைவெளிகளைக் கறையான்கள்
இட்டு நிரப்பும் கள்ளத்தன வழித்தடத்தில்
எலும்புகளைப் பொறுக்கிவைத்துத்
தந்திரம் செய்யும் மாயகனின்
விலா எலும்பிலிருந்து எழும் பெரும் தீ
அழிக்கும் உத்தரவிற்குக் காத்திருக்க,
கதம்பைக் கயிற்றினைக் கொண்டு
எறும்புகள் இழுக்கும் தோரணையில் விழுகின்ற
பெரு மழையில் நழுவும் கந்தகத்துப் பூமி
விழுங்கிச் செரிக்கும் நாளில்
விடியல் பாட்டெழுதக் காத்திருக்கும்
கூட்டிலொரு புழுவாய் துடிக்கும்
மனதின் வேட்கை போதும் அறம் செழிக்க!
- முகமது பாட்சா*
14/12/2019
நிறைவேற்ற முடியாத
சொல்லொன்றில் உட்கார்ந்து கொண்டு
பயணம் செய்வது
அத்துணைச் சுலபமல்ல...
சன்னலைத் திறந்து வைத்தாலும்
காற்று உள்ளே வராது
வாசற்கதவு
தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருக்கும்...
கவ்வியிருக்கும் சூழல்
காலைவிட்டுக் கழலும் வரை அவத்தை...
பிடியிலிருந்து நழுவிய
அவ் வார்த்தைகளைச்
சபித்துக் கொண்டிருக்கிறேன்
அச் சொல் இப்போது எனக்கு
முதன் முறையாகப்
பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது!
- முகமது பாட்சா*
14/12/2019
சன்னல் கதவுகள்
அடித்துக் கொண்டேயிருக்கின்றன
வீட்டில்
யாராவது இருக்கிறீர்களா?
எதிரெதிர் சன்னல்கள்
திறந்திருக்கின்றன
காதல் காற்று மெல்ல வீசுகின்றது...
பாழடைந்த சன்னல்கள்
காத்திருக்கின்றன
பழைய மரக்கடையில்...
யாராவது வருவார்களா?
மூடிக்கிடக்கும்
சன்னலின் உட்புறம்
முதியவளின் மூச்சுக்காற்று
இரைத்துக் கொண்டிருக்கிறது...
திறந்து வைத்த சன்னலில்
பார்வைகளை வீசிவிட்டு
வார்த்தைகளைத்
தூண்டில் போட்டுப் பிடிக்கிறான்...
சாத்திவைத்த சன்னலில்
மெதுவாக வெளியேறுகிறது முனகல்
பசியெடுத்தவன்
சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்...
சன்னல் கதவுகள்
அடித்துக் கொண்டேயிருக்கின்றன
வீட்டில்
யாராவது இருக்கிறீர்களா?
- முகமது பாட்சா*
15/12/2019
அன்பிற்குரிய அறிவிலி அரக்கனே
நாங்கள் என்றுமே
போராடுவதற்காகத்தான் பிறந்திருக்கிறோம்
விந்துவாய் நுழைந்த போராட்டம்
கருவாய் உருண்டதை
நீ பிண்டத்தின்
அடக்கம் என்று எடுத்துக் கொள்கிறாய்...
எட்டி உதைத்து எம்பி வெளிவந்ததில்
எம் தாய் கத்தி அழுததை
இயலாமையென நினைக்கிறாய் அறிவிலியே...
முட்டிக் கடித்துத்தான் பாலையே
நாங்கள் முலைகளில்
எட்டிக் குடித்தோம் என்பதை அறிவாயா!
கத்தியழுதே உணவினைத் தேடினோம்...
தொட்டில் மழலையாய் இருந்திடாமல்
ஒட்டி ஒருக்களித்து
முட்டியிட்டு சுவர் பிடித்து நடந்தவர்களுக்கா
பாடம் நடத்துகிறாய்?
தாய் பெற்றவலி அறியாதவன்
செத்த எலி என்பது எங்களுக்கும் தெரியும்...
போராட்டம் புதிதல்ல
அறிவிலியே...
சாகாதவன் இங்கு எவனும் இல்லை...
- முகமது பாட்சா*
16/12/2019
இந்த முறையாவது
என்னை நிறைவாக்கி விடவேண்டும்
விம்பங்களாகச் சிதைந்திருக்கிறேன்
கனவொன்றில்
என்னைப் பார்த்தாகச் சொன்னவன்
நீர்மையாக இருந்ததாகச் சொல்கிறான்..
என்னுள் நீந்துகின்ற மீன்கள் குருடானவை
மோப்பத்தை வைத்துக் கொண்டு
வளைந்து நெளிந்து வாசம் செய்கின்றன...
நானொரு பாடகனும் கூட
வாயசைவுகளில் ராகத்தைப் பிரியுங்கள்...
கேட்கவில்லையென்றால்
அஃது உங்களின் குறை...
சாகரத்தின் மௌனத்தைப் போதியில் தேடுவதுபோல்
தேடிக் கொண்டிருக்கிறீர்கள்
அலைகளிடம் நுரைத்து மூச்சு விடுகிறேன்..
நீங்கள் குறையுடன் தேடுகிறீர்கள்...
பாடல்
ஊமையின் சங்கீதமாக அழுந்துகிறது...
- முகமது பாட்சா*
16/12/2019
விரல்களை உயர்த்தாத வரை
குரல்வளைகள் நசுங்கியே கிடக்கும்...
மௌனம் என்பது
செத்துப்போன மொழி வேலைக்கு ஆகாது...
அதிகாரன் என்பவன்
ஒருவகையான பூச்சாண்டி...
நாம் அழிகின்ற போது அவனும்
அரக்கு மாளிகையில் இறந்து கிடப்பான்...
கால்களென்பது நடப்பதற்கு
மட்டுமல்ல எட்டியுதைக்கவும்தான்...
உரிமை உடலோடு
நழுவிக் கொண்டு கழலாது...
மண்ணின் பாசம் வாளெடுத்துச் சுழற்றும்...
அப்பன் பூமி இதுவென்று ஆர்ப்பரிக்கும்...
பேசுகிற நேரத்தில் பேசாதவன்
கால்களை முன் வைக்கிறான்
சங்கிலிகளில் பிணைத்துக் கொள்ள...
இருட்டறை
இமைகளுக்குள்தான் இருக்கிறது...
வெளிச்சம் வேண்டுமென்றால்
விழித் திறந்து பார்ப்பதும் அவசியம்....
- முகமது பாட்சா*
17/12/2019
CAB என்ற
கறையானைத் தேசமெங்கும் தூவிவிட்டு
உரம் இறைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்
அடிமை விசுவாசிகள்
என்றுமே அடிமைகளென்பதால்
நாக்குகள் புழுக்களைப்போல் நெளிகின்றன
குஜராத்தில் குலமறுத்தவர்கள்
குடியாட்சியில் விஷம் கலக்குகிறார்கள்...
NRC என்ற நச்சுப் பாம்பு
நாக்கைத் துழாவிக் கொண்டேயிருக்கிறது...
பாம்பைப் பிடிக்கத்தான் போராட்டம்
சாத்தான் கழுத்தில்
சுற்றிக் கொண்டு கடவுளென்கிறான்...
தேசம் உணர்வின் மொழி
கை கோர்த்துவிட்டால் கலங்க மாட்டோம்...
அதுவரை நீ
மதுக்குடுவையில் ஊர்ந்து கொண்டேயிரு!
- முகமது பாட்சா*
17/12/2019
சாத்தான் தன் கால்களை
இப்போது அகல வைத்திருக்கிறான்...
அவனுக்கு எப்போதுமே நரியின் கண்கள்
ஓ நாயின் வாய்...
சபிக்கப்பட்டவனின் ரோமங்கள்
நரகலின் புழுக்கள்....
ஆதாமின் தோட்டம் இப்போது
துஷ்ட ஜின்களால் நிரம்பியிருக்கிறது...
நோவாவின் படகில்
ஓட்டையிடத் துடிக்கிறது அவனது பற்கள்
மூசாவின் ஆசாவைத் திருடிவிட்டதாக
எக்களிக்கிறான்....
ஈசாவின் கண்ணீரை
ஒயினென்று ரசித்து மிடறுவதை...
காபாவின் கண்கள் கவனித்துக் கொண்டிருக்கிறது...
உண்மையில் அவனொரு
அபாபில் பறவைகளை மிரட்டுகின்ற
அற்ப புழுவென்று யாருக்கும் தெரியாது!
- முகமது பாட்சா*
18/12/2019
காம முத்திரைகளுக்குப்
பொழிப்புரையொன்றை எழுதிவிட்டு
காதல் கடிதம் என்கிறாய்
நான்கு சுவர்கள் பற்றியெரிகின்ற போது
முனங்கலின் தீக்கு
எப்படி விளக்கவுரை எழுதுவேன்?...
அஞ்சனம் தீட்டிய விழிகள்
இடையில் விழுவதற்கான அம்புகள்...
எதிரிகளை வீழ்த்த
இவற்றையா எடுத்துச் செல்ல முடியும்?
- முகமது பாட்சா*
18/12/2019
நிறைந்திருக்கும் கற்களிடையே
கழுவிலேற்ற
அகலிகையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்...
பித்துப் பிடித்தது போல்
கண்ணகி அலைந்து கொண்டிருக்கிறாள்...
மதுரை எரிவதில் உடன்பாடில்லை...
கனவுகளைப் பத்திரமாக அடைப்பதற்கு
சுவர்கள் உயரமாக எழும்புகின்றன....
நரியோடு வலம் வருகிறான் சாணக்கியன்
அரசன் அவனது உச்சி மண்டையில்
ஆடிக் கொண்டிருக்கிறான்...
காலத்தைப் புதைத்து
காலத்தை மீட்பதாகக் காலதேவன் உரை...
உருகும் பனிமலையில்
எல்லைகள் சுருங்குகின்றன...
எலும்புகளைத் தோண்டி ஆய்கிறார்கள்...
டி.என்.ஏ வில்
மதங்களுக்கான வாய்ப்பாடு கிடைக்கவில்லை...
- முகமது பாட்சா*
19/12/2019
அவர்கள் கூடிக்கூடிப் பேசுகிறார்கள்
ஒரு மரத்தை வெட்டுவதைப் பற்றிதான்
அந்தப் பேச்சு நீள்கிறது
உயிரற்றதாக்கி விட்டால் தளிர்கள்
பிராணவாயு இல்லாமல் இறந்து போகும்
எனக் கணிக்கிறார்கள்
திராவகம் ஊற்றினால் மொத்தத்தில்
பட்டுப் போகலாம் என்றும் பேச்சு நுழைகிறது
அந்த மரம் ஆவேசமாகத்
தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறது..
பறவைகள் தங்களின் வம்சத்தைக் கூட்டி
அவர்களை விரட்டுகின்றன
அடர் மழைக்கு வனம் தயாராகும் போது
எரிப்பதைப் பற்றி ஒருவன்
பேசிக் கொண்டு ஓடி வருகிறான்...
ஆணி வேர் அதன் ஆழத்தை தீர்மானிக்கக்
கிளை விரித்துப் பரவும் வேர்களால்
தேசம் முழுமைக்கும் எரிதழல் வீச்சம்.
- முகமது பாட்சா*
19/12/2019
No comments:
Post a Comment