கோடுகளைப் போட்டு
இதுதான் ரோடுகள் என்றீர்கள்
வியப்பாகப் பார்த்தோம்
நீங்கள் கைதட்டச் சொன்ன இடங்களில்
கைகளைத் தட்டினோம்...
புதிய இந்தியா என்று பெயர் வைத்தீர்கள்
கிராஃபிக்ஸில் கண்டு களித்தோம்
வீட்டிற்குள் நுழைந்தோம்
அடுப்படியைக் காணோம்
தேடிக் கொண்டிருக்கும் போது
ஆகாசத்தில் ராக்கெட் என்றீர்கள்
அண்ணாந்து பார்க்கும் போது
திருவோட்டைக் கொடுத்துவிட்டு
தேசம் திருந்திவிடும் என்கிறீர்கள்...
யாரிடம் நாங்கள் பிச்சைக் கேட்பது?
- முகமது பாட்சா*
05/09/2019
-------------------------------------------------------------------------
தங்கத்தின் விலை
தாவிக் கொண்டிருக்கிறது...
டாலர் நிகர் மதிப்பில்
நாங்கள் வீழ்ந்து கொண்டிருக்கிறோம்
சாலைகள் சரியில்லையென்றாலும்
அபராதம் கட்டுவது நாங்கள் மட்டுமே ...
நீங்களொரு
புண்ணாக்கும் விற்றதில்லை
புடுங்கிக் கொள்ள
வரிகளுக்குப் பஞ்சமில்லை...
ஆலைகளை மூடிவிட்டு
ஆயுதங்களை வாங்குகிறீர்கள்...
அடுத்த வேளைக்கே
ஆகாரம் இல்லையென்கிறவன்
ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்...
சந்திரயான்
நிலவில் இறங்குவது பெருமையே....
- முகமது பாட்சா*
06/09/2019
----------------------------------------------------------------
இருட்டுக்குள்
வெளிச்சம் ஊடுருவுகிறது
வெளிச்சத்தை
நிறங்கள் பிரித்துக் கொள்கின்றன
நான் நிழலாக
விரிந்து கொண்டிருக்கிறேன்...
- முகமது பாட்சா
09/09/2019
-------------------------------------------------------------------
மீன்களுக்கு நீந்த
கடல் கற்றுக் கொடுக்கிறது
கரையில் அமர்ந்திருக்கிறேன்
காற்று என்னைச் சுவாசிக்க!
- முகமது பாட்சா
----------------------------------------------------
நான் கனவுகளை
மொழி பெயர்த்துக் கொண்டிருக்கும் போது
ஒருவன் கானல் நீரில்
குளித்துக் கொண்டிருந்தான்
- முகமது பாட்சா
-------------------------------------------------------
ஏன்? எதற்கு? எப்படி?
என்ற வாசல்கள்
எப்போதும் திறந்தே கிடக்கும்
நுழையும் வரை
மூளை இறந்து கிடக்கும்
- முகமது பாட்சா
-------------------------------------------------------
இருட்டிற்குள் நுழைந்ததும்
போர்வைக்குள் முடங்குகிறது அச்சம்
விளக்கை ஏற்றாதவன்
வெளிச்சத்தைத் தேடுவது கற்பனை
பறவைகள்
கவலையுடன் விழிப்பதில்லை
அதன் சிறகுகளில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது நம்பிக்கை
தொடக்கம் என்பது
இதயத்திலிருந்து தொடங்குகிறது..
கண்களைக் கட்டிக் கொண்டாலும்
கால்களுக்கு நம்பிக்கை வேண்டும்...
- நட்புடன்.....முகமது பாட்சா*
-------------------------------------------------
இரவை
விழுங்கிய பிறகுதான்
பகலையே துப்புகிறது
பொழுது...
முகமது பாட்சா*
------------------------------------
இதுதான் ரோடுகள் என்றீர்கள்
வியப்பாகப் பார்த்தோம்
நீங்கள் கைதட்டச் சொன்ன இடங்களில்
கைகளைத் தட்டினோம்...
புதிய இந்தியா என்று பெயர் வைத்தீர்கள்
கிராஃபிக்ஸில் கண்டு களித்தோம்
வீட்டிற்குள் நுழைந்தோம்
அடுப்படியைக் காணோம்
தேடிக் கொண்டிருக்கும் போது
ஆகாசத்தில் ராக்கெட் என்றீர்கள்
அண்ணாந்து பார்க்கும் போது
திருவோட்டைக் கொடுத்துவிட்டு
தேசம் திருந்திவிடும் என்கிறீர்கள்...
யாரிடம் நாங்கள் பிச்சைக் கேட்பது?
- முகமது பாட்சா*
05/09/2019
-------------------------------------------------------------------------
தங்கத்தின் விலை
தாவிக் கொண்டிருக்கிறது...
டாலர் நிகர் மதிப்பில்
நாங்கள் வீழ்ந்து கொண்டிருக்கிறோம்
சாலைகள் சரியில்லையென்றாலும்
அபராதம் கட்டுவது நாங்கள் மட்டுமே ...
நீங்களொரு
புண்ணாக்கும் விற்றதில்லை
புடுங்கிக் கொள்ள
வரிகளுக்குப் பஞ்சமில்லை...
ஆலைகளை மூடிவிட்டு
ஆயுதங்களை வாங்குகிறீர்கள்...
அடுத்த வேளைக்கே
ஆகாரம் இல்லையென்கிறவன்
ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்...
சந்திரயான்
நிலவில் இறங்குவது பெருமையே....
- முகமது பாட்சா*
06/09/2019
----------------------------------------------------------------
இருட்டுக்குள்
வெளிச்சம் ஊடுருவுகிறது
வெளிச்சத்தை
நிறங்கள் பிரித்துக் கொள்கின்றன
நான் நிழலாக
விரிந்து கொண்டிருக்கிறேன்...
- முகமது பாட்சா
09/09/2019
-------------------------------------------------------------------
மீன்களுக்கு நீந்த
கடல் கற்றுக் கொடுக்கிறது
கரையில் அமர்ந்திருக்கிறேன்
காற்று என்னைச் சுவாசிக்க!
- முகமது பாட்சா
----------------------------------------------------
நான் கனவுகளை
மொழி பெயர்த்துக் கொண்டிருக்கும் போது
ஒருவன் கானல் நீரில்
குளித்துக் கொண்டிருந்தான்
- முகமது பாட்சா
-------------------------------------------------------
ஏன்? எதற்கு? எப்படி?
என்ற வாசல்கள்
எப்போதும் திறந்தே கிடக்கும்
நுழையும் வரை
மூளை இறந்து கிடக்கும்
- முகமது பாட்சா
-------------------------------------------------------
இருட்டிற்குள் நுழைந்ததும்
போர்வைக்குள் முடங்குகிறது அச்சம்
விளக்கை ஏற்றாதவன்
வெளிச்சத்தைத் தேடுவது கற்பனை
பறவைகள்
கவலையுடன் விழிப்பதில்லை
அதன் சிறகுகளில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது நம்பிக்கை
தொடக்கம் என்பது
இதயத்திலிருந்து தொடங்குகிறது..
கண்களைக் கட்டிக் கொண்டாலும்
கால்களுக்கு நம்பிக்கை வேண்டும்...
- நட்புடன்.....முகமது பாட்சா*
-------------------------------------------------
இரவை
விழுங்கிய பிறகுதான்
பகலையே துப்புகிறது
பொழுது...
முகமது பாட்சா*
------------------------------------
No comments:
Post a Comment