
இருளுக்குள்தான்
வெளிச்சம் நிறைந்திருக்கும்
விதைக்குள்ளிருக்கும் விருட்சத்தை
யார் வெளிக் கொணர்வது?
கேள்விகள் இல்லையென்றால்
உலகம் சுருங்கிப் போகும்...
விடைகளைத்தேடும் போது
வெளிச்சம் காட்டுகிறான் ஆசிரியன்..
அட்சரம் சொல்லிக் கொடுப்பவனே
ஆகாசப் புன்னகைக்காரன்
நிழலை மறந்தவன்
கோடாரியோடு அலைகிறான்...
போதி மரம்
வகுப்பறைக்குள்தான் உட்கார்ந்திருக்கும்
வாசல் கதவு திறக்கும் போது
வருகின்ற காற்று வரவேற்பு வாசிக்கும்
நீ எதுவாகவும் இரு
உன் சின்னப் புன்னகையை
அந்தப் போதி மரத்திற்குச் சாத்திவிட்டு
- மு.முகமது பாட்சா*
05/09/2019
No comments:
Post a Comment