Thursday, 26 September 2019

ஒரேயொரு காதல் கவிதை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஒரேயொரு காதல் கவிதை எழுதிவிட
எத்தனிக்கிறேன்...
பற்றாக்குறையென்பது
தேநீர் கோப்பையினடியில்
மண்டியாகத் தங்கிக் கிடக்கிறது...
கறுத்துக் கிடக்கும் கவரிங் நகையில்
ஒட்டியிருக்கும் சோகம்
ஒரு முழம் பூவில் மாறித் தொலைக்கலாம்...
பட்ஜெட் உதறிவிட்டு
மிச்சம் காட்டிய புடவையில்
அப்படி என்னவொரு இரசனை
இருந்து விடப் போகிறது?
என்னதான் புன்னகையை அணிந்தாலும்
கண்கள் பேசும் சோகத்தை
மறைத்துவிடவா முடியும்?
எப்படியும்
ஒரேயொரு காதல் கவிதை எழுதிவிட
எத்தனிக்கிறேன்...
நாளை
வீட்டு வாடகைக்கு என்ன செய்வது?

- முகமது பாட்சா*
25/09/2019

No comments:

Post a Comment

Popular Posts