
நானொரு சைகைக் கூத்தன்
ஒப்பனைகள்
மிதமிஞ்சித்தான் இருக்கும்...
அரசனாகும் போது
கண்களையுரிட்டிக் காட்சி செய்கிறேன்...
மந்திரியாகி
காலில் விழுந்து காலத்தைத் தேடுகிறேன்...
பஞ்சணையில் மட்டும்
பச்சைக் காட்டும் அரசியாகிறேன்....
உதடுகளைக் காதிற்கிழுத்து
நகைக்கிறேன்
நீங்கள் இங்குச் சிரிக்கிறீர்கள்...
நான் அழுது கொண்டிருக்கிறேன்
உண்மையில் யாரிங்குக் கோமாளி?
- மு.முகமது பாட்சா*
26/09/2019
Photo : Mime Artist Marcel Marceau
No comments:
Post a Comment