Sunday, 1 September 2019

தூங்கா இரவு

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

ஒவ்வொரு இரவிலும் 
ஏதாவதொன்று நிகழ்ந்து விடுகிறது... 
இப்போதெல்லாம் கனவுகள் காண்பதற்குக் 
கண்கள் அனுமதிப்பதில்லை... 
நாளை வந்து 
மண்டைக்குள் அமர்ந்து தொணதொணக்கிறது 
சாத்தானின் சங்கீதக் கீர்த்தனங்கள் 
ஒவ்வொன்றாக வந்து இசைக்கின்றன 
விடியலுக்கான அச்சத்தை 
விழிகள் சுமந்து கொள்ள.. 
சுவரில்லாத வீட்டில் திருடர்கள் 
எப்போதும் 
கதவைத் தட்டிக் கொண்டேயிருக்கிறார்கள்... 
எழுத்தாணியை 
மூளைக்குள் சொருகிவிட்டு 
எழுதி வைத்த கவிதைகள் ஒப்பாரி வைக்கின்றன 
இனிமேல் இங்குத் 
தூங்காமல் இருக்கிறவன்தான் ஏழை...

- மு. முகமது பாட்சா*
01/09/2019

No comments:

Post a Comment

Popular Posts