
நூல் வெளியீட்டு விழாவில் என் பேச்சின் சாரம்
இலக்கியம் பேசுவதற்கும் இனம் பார்க்கப்பட்ட அரசியலில்
இருந்து மெல்ல நகர்ந்திருக்கிறது இந்த வானம். தாலாட்டும்
பாடல்களுக்கு யார் மெட்டமைத்திருப்பார்கள் ?
வயல் வெளி நாற்றுகள் பாட்டுகள் மட்டுமே கேட்டு வளர்ந்த போது
அமோக விளைச்சல்களைத் தந்தன.. இப்போது டிராக்டர்களின்
சப்தத்தில் பதராகிப்போனது பயிர்கள்.. நாம் பாட்டுக் குடிகள்...
எங்கும் பாடிக் கொண்டே திரிவோம்.. நீ பாடாதே என்று சொல்ல
யாருடைய சங்கீர்த்தனங்களும் இங்கு நமக்குத் தேவையில்லை....
மீனவன் கூட வலையோடு பாட்டுகளை போட்டுத்தான்
மீன்களை அள்ளி வருகிறான். நானும் கூட
ஒரு நாடோடி பாட்டுக்காரன்தான். தேசாந்திரி போகிற வழியில்
கண்களை மூடிக் கொண்டா போகமுடியும்?
காகிதப் பறவைகளுக்குக் கவர்ண்மெண்ட் வேண்டுமென்றால்
சாப்பாடு ஊட்டலாம்.. கதறியழும் கானகத்துப் பறவைகளுக்குக்
கவிஞன்தானே குரலெழுப்ப முடியும். அப்படித்தான் நான்
இந்தச் சமூகத்தை எழுதுகிறேன்.. என் பாட்டு ஒரு புல்லையும்
புடுங்காதென்றுச் சொன்னால்... பாரதியின் பாட்டும்
அப்படித்தான் என்று சொல்வேன்...
நான் எப்போதுமே வார்த்தைகளோடுவே
விளையாடிக் கொண்டிருப்பவன்... என் வார்த்தைகளின் சூட்டை
ஆங்கிலத்திலும் குறையாமல் சமைத்திருக்கிறார்
நண்பர் ஶ்ரீ வத்ஸா /அவருக்கு என் அன்பின் நேசங்கள்..
என் ஒற்றைக் கோட்டில் சிந்திக்கும் கவிஞரும்
கலை விமர்சகருமான அணிந்துரை வழங்கிய ஆசான் இந்திரன்
அவர்களுக்கும் / ஆரிகாமி வனம் என்ற இந்த நூல் வெளியாவதில்
உறுதியாக நின்ற படைப்பு ஜின்னா அவர்களுக்கும்,
மேலும் எனது கவிதைகளை ஆசிர்வதிக்கும் சிற்றிதழ்களுக்கும் ,
நட்பின் புன்னகைகளுக்கும் இந்தக் கவிதைகளையே
பூங்கொத்துகளாக சமர்ப்பிக்கிறேன்... நன்றியும் வாழ்த்துகளும்.
- முகமது பாட்சா*
22/09/2019
No comments:
Post a Comment