
CAR என்ற வாகனங்களின் கீழ்
புழுக்களாக நகர்ந்தவர்கள்...
HELICOPTER என்ற
வாகனத்தைப் பார்த்து
நமஸ்காரம் போட்டார்கள் ...
எஜமானியின் காலழுக்கை
தீர்த்தமென்று சிலாகித்தவர்கள்
வேசம் கலைத்து
நாகமாக மாறி நஞ்சுதறி நகர்ந்தபோது...
விடியல் பிறந்ததாக
வானசாஸ்த்திரம் பிரமமெழுதியது...
சாத்தான்
ஆயக்காலை அகலமாக்கி
தேரின் சக்கரத்தில்
ஆப்பு வைத்த போது மீண்டும் அவர்கள்
CAR என்ற வாகனங்களின் கீழ்
புழுக்களாக நகர...
'நாய்கள் நக்கித்தான் குடிக்குமென்று'
பரதேசியொருவன்
பாடிக் கொண்டே செல்கிறான்.
- முகமது பாட்சா*
03/09/2019
No comments:
Post a Comment