
ஆதிக் காதலைப் பற்றி
எழுதி வைத்த கவிதைகள் மெல்லப் பறக்கின்றன
நீட்சியில் நிலைத்த காதல்
புன்னகைகளால் தைக்கப் பட்டிருக்கிறது
அருகிலிருந்த காதல்
அரூபமென்று மேலெழும் போது
விக்கித்துத் திணறும் காதலை என்னவென்று சொல்வாய்...?
நான்கு பக்கங்களிலும் சுவர்கள்
வேகமாக உயர்கின்றன
வானம் கூரையாகித் தலையைத் தட்டுகிறது...
இனியிருக்கும் வழியென்றால்
காலின் கீழ் கடிதாயிருக்கும் மண் மட்டும்தான்...
நீயாவது பிளந்து வழிவிடு
அவள் போன பாதையைத் தேடிச் செல்கிறேன்...
- மு.முகமது பாட்சா*
26/09/2019
சிறப்பு
ReplyDeleteபாராட்டுகிறது மனம்
~கா.அமீர்ஜான்