Wednesday, 14 July 2021

யா தைபா - 1

 தைபா 1



கண்களைத் திறந்து வைத்துவிட்டு

கதவுகளை அடைத்துவிட்டாயா தைபா!

வெளிச்சன்

எனக்குள் விளக்கேற்றுகிறான்!


அபயாவிற்குள்

நட்சத்திரங்கள் மின்னுகின்றன....

இளம் பிறை

உன் இதழ்களில் எப்போது பிரகாசிக்கும்?


விரதமிருப்பவன்

விலாவெலும்புகளால் கூடு கட்டுகிறேன்...

உன் கல்பு

எங்கும் பறந்து சென்றுவிடக்கூடாது!


அசைந்தாடும் காற்றில்

உன் திக்ருகள் உதிர்ந்து விழுகிறதோ...

உன் வாசனையை

என் சுவாசம் நூலாக்கி நெய்கிறதே!


உறங்கிவிடாதே தைபா

கனவைவிட்டு உன்னை இறக்கவில்லை....

காதல் சொல்ல வார்த்தைகளைத் 

தேடிக் கொண்டிருக்கிறேன்!

- முகமது பாட்சா*

14/07/2020

---------------------------------

No comments:

Post a Comment

Popular Posts