குறியீடுகளால்
நெய்யப்பட்ட புனைவுகளால்
என்னைப் போர்த்திக் கொள்கிறேன்....
வெறுமைக்கு ஆகாயம் என்று பெயர் கொடுத்தவன்
ஆதிக் காற்றை இரவல் கேட்க
சுதந்திரமாகச் சுற்றி வருகின்றன தீ நுண்ணிகள்!
பெருமையின் பெயர்தான் ஆடம்பரம்!
பசித்தவன் வீட்டில் நிறைந்த அன்பை
வறுமை என்பதும் கூட சரியான காரணப் பெயரே!
வில்லையும் அம்பையும்
காட்சியாக்கி காலரியில் வைத்த பிறகு
தீ நுண்ணிகள் விரட்டுவதில்
என்ன ஆச்சரியம் நிகழ்ந்துவிடப் போகிறது?
தொட்டுத் தழுவ முடியாத உடலுக்கு
எத்தனைப் பெயர்களை நட்சத்திரங்கள் செதுக்குகின்றன!
நேற்று அவன், இன்று வேறொருவன்,
நாளை நான் "ம்" அவ்வளவுதான்!
பசி அப்படியில்லை!
- முகமது பாட்சா*
10/07/2021

No comments:
Post a Comment