Thursday, 29 July 2021

நிரவவிதியம்

 



நூலாம்படை கோடுகளுக்கான கணக்கியலை

பிதாகோரஸ் விதிகள் 

என்றுமே விளங்கிக் கொள்வதில்லை!

திகிரியின் வெப்பத்தில்

திசையெட்டுமா ஒரே நேரத்தில் மிளிர்கின்றன?

விலங்குகளுக்கு

என்றுமே மனிதர்களின் முகம் கிடையாது......

அரசன் 

ஆண்டியாக பிறந்திருந்தாலும்

திசையெட்டும் தன்னைத் தொழவே பணிக்கிறான்!

நிசப்தம் 

நிரவம் கொண்ட காதுகளுக்கும் சப்தமே!

விதியென்பது

விளையாடச் செய்தப் பதுமை....

அரவம் அதற்குள் முட்டையிட்டிருக்கும் பார்!

.

- நட்புடன்..... முகமது பாட்சா*

29/07/2021



 

No comments:

Post a Comment

Popular Posts