காலற்ற மனிதர்கள்
நடந்து செல்கிறார்கள் வாய்களால்!
கண்ணற்ற ஒருவன்
காதலைக் கண்ணாடியாக அணிந்திருக்க...
கயிற்றை வாங்கும் ஒருவன்
துக்கத்தின் கதைக்கு தற்கொலை என்று பெயரிடுகிறான்!
கைகளைக் கிழித்துக் கொண்டவன்
இரத்தத்திற்கு காதல் என்று பெயர் வைக்க....
அமிலத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள்
வஞ்சமென்று அச்சாகிறது!
பகலைவிட இரவு
சுத்தமாக இருக்கிறது என்பதே உண்மை!
முகமூடியைக் கழற்றாமல்
கண்ணயர்ந்தவனுக்கு மரணம் முற்றுப் புள்ளி!
"ம்" அவ்வளவுதான்!
.
- நட்புடன்..... முகமது பாட்சா*
16/07/2021
No comments:
Post a Comment