#தைபா_14
பெரும் மழையும்
காதலும் அடைகட்டிப் பெய்கிறது
சேதாரம் இல்லாமல்
என்னையும் சேர்த்துக்கொள் தைபா!
பூக்களைக் கழுவுகின்ற மழைதானே
என்னையும்
கழுவிக் கொண்டிருக்கிறது
தூய்மைதான் உன் பெயர் அல்லவா!
ஒலுவெடுக்கும் யாரும்
மழையை நினைப்பதில்லை!
மழையில் நனையும் என்னைத்தான்
மஜ்னூன் என்று மருள்கிறார்கள்!
எனக்குள்ளிருக்கும் மழை
பாட்டை இசைத்துக் கொண்டிருக்கிறது
காதலென்று பெயரிட்டு
காஃபாவை முன்னோக்குகிறேன்!
- முகமது பாட்சா*
29/07/2020
காஃபா - இறையில்லம்
No comments:
Post a Comment