ஆளாளுக்கு
சரித்திரத்தை மாற்றிக் கொண்டேயிருக்கிறோம்!
நம்புவதற்கு
நீங்கள் முட்டாள்களாக
இருந்தால் மட்டுமே போதும்!
மன்னனை விட
மக்கள் பிரதிநிதி மிகவும் மோசமானவன்
கள்ளவோட்டுப் போட
அவன்தான் கற்றுக் கொடுக்கிறான்!
ஏழு மலைகள் தாண்டி
ஏழு கடல்கள் தாண்டி இன்னமும்
நம் இளவரசியை
யாரும் மீட்டப் பாடில்லை!
இப்போதுதான்
வாய்களைக் கட்டி இருக்கிறார்கள்
காதுகளையும்
கண்களையும் நீங்களாகவே மூடிக்கொண்டால்
கால்விரல்களை
எளிதாகக் கட்டி விடுவார்கள்!
keep silence
- முகமது பாட்சா*
30/07/2020
No comments:
Post a Comment