உளிகள் பேசும் போதே
சப்தம்
எழுப்பிக் கொண்டிருந்தது அந்தச் சிலை!
மந்திரமோதாமல்
கண்கள் திறந்துகொண்டதாகப் பேச்சு!
தாந்திரிகன் தனது கனவில்
தாளம் வாசிப்பதாகப் புலம்பினான்!
உயர்குடியோன்
கால்களில் கறையான்கள் ஏறுகின்ற போது
சிலையான்
கொம்பு ஊதிக்கொண்டிருந்ததாகச்
செய்திப் பரவுகிறது....
சிலையின் கைகளை முறித்தார்கள்...
கனவில் தொல்லை அதிகமானது!
கால்களை முறித்தார்கள்
தலையையும் முறித்துக் காவாயில் வீசினார்கள்
ஓராயிரம் சிலைகள்
புதிதாக நின்று கொண்டிருந்தன
கேட்கக்கூடாத பல நூறு கேள்விகளோடும்...
செருப்புகளோடும்!
- முகமது பாட்சா*
17/07/2020
No comments:
Post a Comment