அவன் சிரித்தான்.
அவர்களும் சிரித்தார்கள்!
அவர்களை;அவன்,
பைத்தியமாக பார்த்தான்.
அவர்கள்;அவனை,
"பைத்தியம்"
என்றுச் சொன்னார்கள்!
அவன் கையில்
ஆங்கில தினசரி!
"படித்த பைத்தியம்"
ஒரு பெரியவர் சொன்னார்!
"பொண்டாட்டி
ஓடிப் போயிருப்பா!
அதனால ஆகிருப்பான்"
ஒரு பெண்ணே சொன்னாள்!
"திருடனாகவும் இருக்கலாம்?"
ஒரு வாலிபன் சொன்னான்!
"பொய்யான காயத்தை
மெய் யென்று நம்பும்
மூடர்காள்...
நீங்கள் என்ன, பைத்தியமா?"
அவன்
வாய்விட்டுச் சிரித்தான்!
"பைத்தியமேதான்!"
ஒரு சிறுவன்
கல் விட்டடித்தான்...
"அட பைத்தியங்களே...
என்னையா அடிக்கிறீங்க?
ஓடுங்கள்!"; அவன்
கல்லை கையில் எடுத்தான்.
அத்தனை பைத்தியங்களும்
ஓடியது!
அவனை மீண்டும்
"பைத்தியம்!பைத்தியம்"
என்று சொல்லிக் கொண்டே!
___________________________
- முகமதுபாட்சா*
10/07/2015
No comments:
Post a Comment