Friday, 16 July 2021

 





விளக்கில்லாமல்
வெளிச்சத்தை மீட்க முடியுமா? என்றான் அறியான்
"இதயத்தில்" என்ற
சூஃபியின் ஓரு வார்த்தையில் தீபம் எரிந்தது!
.
முஸல்லாக்களில் தொழுகிறவன்
அழுதுக் கொண்டிருக்க....
மண்தரையில் மகிமையை விரித்து தொழுகையை 
சுவனத்துக்குத் தூதுவிடுகிறார்!
.
நெருப்பை
திக்ருகளால் மூட்டி குளிர் காய்கிறார் சூஃபி...
இரவு தன் இதயத்தை
வெளிச்சமாக்கி அணைத்துக் கொள்கிறது!
.
- நட்புடன்.....முகமது பாட்சா*
16/07/2021



No comments:

Post a Comment

Popular Posts