அந்த நேரான கோடு
சற்று வளைந்து நெளிந்து நிமிர்கிறது...
அதனை
இப்போது கேள்விக்குறியென்றார்கள்!
பேதையின் இதிகாசக் காவியம்
எழுதுவதாய்ச் சொல்லும்
நவயுகக் கன்னியின் நாலாம் பக்கத்தில்
இலக்குவன்
விசாரணை கூண்டில் நின்று கொண்டிருக்க...
அகலிகையும், சூர்ப்பணகையும்
96 ம் பக்க
பிராது மண்டபத்தில்
மனுக்களோடு வரிசையில் நிற்கிறார்கள்!
பூமிஜா
வளைந்த கோடுகளை
வில்லாக்கி நானேற்றுகிறாள்...
அடுத்த பக்கத்தில்
சில வரிகள் மட்டும் எரிந்திருப்பது
எதற்கென்று யாருக்கும் தெரியவில்லை!
- முகமது பாட்சா*
28/07/2020
No comments:
Post a Comment