
ஒரே படத்திற்காக
மூன்று கவிதைகள் முளைத்திருந்தன
வார்த்தைகளை விழுங்கிய படம்
பேருருவெடுத்துப் பெருமாட்டமாடியது
சிந்திய எழுத்துகளை
சில காகங்கள் பொறுக்கிச் சென்றன...
வடிவழிந்த வார்த்தைகள்...
படத்தின் பின்னால் பதுங்கிக் கொண்டன
எழுதியவனை
படம் தேடிக் கொண்டிருக்க
கவிதைகளைத் தேடிக் கொண்டிருந்தனர்
அந்த மூன்று கவிஞர்கள்.
- மு.முகமது பாட்சா*
25 /10 /2018
No comments:
Post a Comment