Thursday, 4 October 2018

ஒதுங்கிய நான்

தானியங்கு மாற்று உரை இல்லை.

புரியாத கவிதையென்று பெயரிட்டபிறகு 
பிரித்து ஆராயத் தொடங்கினார்கள்.... 
நெருடிய வார்த்தைகள் அத்துணையும் 
நெகிழி பைக்குள் அடைக்கலமானது... 
புறாவைப் பறக்க விட்டவர்கள் 
காகம் யாரென்ற விவாதத்தில் சாகடித்தார்கள் 
கடல் மட்டும் அலை வீசிக் கொண்டிருக்க 
மீன்களில்லாததால் இஃது அரசியலென்று 
கொட்டிக் கவிழ்த்தார்கள் 
ஓரமாய் ஒதுங்கிய பிணத்தை 
அவசரமாய்க் குழியில் போட்டு மூடியவர்கள் 
இறுதியாய் கவிதை படிக்கும் போது 
நான் மட்டும் 
பெயராய் ஒட்டிக்கொண்டிருந்தேன் 
என்னைச் சுற்றிலும் 
வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தன.

- மு.முகமது பாட்சா*
04 /10 /2018

No comments:

Post a Comment

Popular Posts