
இருட்டிற்கு
வெளிச்சமென்று பெயர் வைத்துவிட்டு
விளக்கை
இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்...
எரியாத விளக்குகளில்
எண்ணெய்யை தேடிக் கொண்டிருந்தோம்
வீடுகளை எரித்துவிட்டு
வெளிச்சம் வந்ததாகச் சொன்னவர்கள்
ஆலயங்களில் அடைக்கலம் தந்தார்கள்
காசில்லாத பிரார்த்தனைகள்
கருவறைகளுக்குள் செல்லாததால்
வீதிகளுக்கு விரட்டப்பட்டோம்....
விதியிதுவென
விழுந்த கண்ணீர் துளிகளைச் சேகரித்து
விளை நிலங்களில் பாய்ச்சினோம்
நதிகளை நாய்கள் நக்கிக் கொண்டிருந்தது
நகரத்திற்குள் ஓடி ஒளிந்து கொண்டோம்
கிராமங்கள் தூய்மையடைந்ததாக
பிரதமர்
வானொலியில் உரையாற்றிக் கொண்டிருந்தார்
நகரம் குப்பையாகிக் கொண்டிருந்தது.
- மு.முகமது பாட்சா*
25 /10 /2018
No comments:
Post a Comment