
காகிதங்களின் வனைவுகளில்
ஆரிகாமிகளின் வனம் விரிகிறது....
மழையை வனையத் தெரியாத விரல்கள்
கப்பல்களை
அதிகம் உற்பத்தி செய்கின்றன....
மரங்களை வனைந்தவன்
நிழலை மட்டும் நிஜமாகக் காண்கிறேன்
காற்றிலாடும் நூலில்
ஊஞ்சலாடும் பறவைகளுக்கு உயிரில்லை
வேட்டையாடத் தெரியாத விலங்குகள்
அழகாக மட்டுமே இருக்கின்றன...
காற்றும் நான் வனைந்ததில்லை...
பெரும் மழையொன்றில்
நான் பற்றியெரிந்து கொண்டிருக்கிறேன்...
ஆரிகாமிகளின் வனம்
ஆகாசத்தை தேடிக் கொண்டிருக்கிறது.
- மு.முகமது பாட்சா*
19 /10 /2018
அன்பு நண்பர் ஶ்ரீ வத்ஸா அவர்களின் அருமையான உடனடி மொழியாக்கத்தில்:
In the folds of
sheets of paper,
origami forests
spread wide.
Fingers which don't know
how to shape rain,
produce lots of ships.
I, who gave form to trees,
see only the shadow
as real.
The birds swinging
on the thread
swaying in the air
are lifeless.
Animals that don't know
how to hunt
look pretty only.
The wind also
has not been shaped by me.
I caught fire
and am burning
in a big deluge.
The origami forest
is in search
of the sky.
~Sri 20:02 :: 19.10.2018 :: Noida
No comments:
Post a Comment