
வைன் அருந்திய போதையாய்
காதல்
கண்ணைக் கட்டிக் கொண்டு நிற்கிறது
அதன் கைகளில்
சில கோரிக்கை விண்ணப்பங்கள்
ஆர்வத்துடன் எதையோ தேடுகிறார்கள்
உளறல் மொழிகளில்
ஆடைகளை நெய்து கொள்கிறார்கள்
விரல்களில்
கவிதை நதி ஓடிக் கொண்டேயிருக்கிறது
சுயம் வைனில் கரைகிறது...
முதலீட்டில்
முத்தம் சேமிப்பாகிறது....
இருட்டிற்குள் வெளிச்சம் பரவ
போர்த்திக் கொள்ள ஆடைகள் வேண்டாம்
கோப்பை காலியாகக் கிடக்க
ஈவாவின் விரல்களில்
வெட்கம் பின்னிப் படர்கிறது....
ஆதாம் அயர்ந்துறங்க
வியர்வையில் மயங்கிக் கிடக்கிறது
காதல்!
- மு.முகமது பாட்சா*
26 /10 /2018
No comments:
Post a Comment