
கழுத்தறுபட்ட
அந்தப் பொம்மையின் கீழ்
சிலவாசகங்கள்
இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கின்றன...
நானும் கூட என்று சிலர்
ஆங்காங்கே பேசிக் கொண்டிருக்க
அது தனியாகவே முனங்குகிறது
அறுபட்ட யோனியில் ஒட்டியிருக்கும்
சாதிய விந்துத் துளிகளில்
தூமை நக்கிகளின்
காம எச்சில் சிந்திக் கிடக்க.....
நானும் கூட என்று சிலர் சொல்வது
இந்தப் பொம்மை அறியாதது...
- மு.முகமது பாட்சா*
28 /10 /2018
No comments:
Post a Comment