Wednesday, 24 October 2018

இறந்து போனவள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

இறந்து போனவள்
தனியாகப் பேசிக் கொண்டிருந்தாள் 
ஓர் ஆலிலையைப் பறித்து 
ஆடைக்குள் பதுக்கிக் கொண்டவள் அழுதாள்... 
கூந்தலைச் சிரைத்து கொளுத்தினாள் 
எலுமிச்சைப் பழங்களையுருட்டி சிலிர்த்தாள் 
ஆக்ரோசம் கூட்டியாடியவள் 
மாகாளி மகளென்று விளித்துக் கொண்டாள் 
மண்டையோட்டிற்கு முத்தமளித்து 
மடியில் கட்டிக் கொண்டாள்.... 
பேயென்றவர்கள் 
பிசாசின் நாற்றம் சூடியவளென்றார்கள்... 
ஆடைகளைக் களைந்தவள் 
பற்களை நரநரத்த சப்த கொடூரத்தில் 
பயந்து பதுங்கிக் கொண்டார்கள்.... 
அழுகியக் கையை 
ஆழம் தோண்டி புதைத்துக் கொண்டிருந்தவள் 
அக்கம் பக்கம் பார்த்துவிட்டு மீண்டும் அழுதாள்.... 
யோனியில் புழு நெளிந்து கொண்டிருந்தது 
கையில்லாத பிணமொன்று கரையொதுங்கியிருப்பதாக 
புதிய கதை ஊரில் வலம் வரத்தொடங்கியது.

- மு.முகமது பாட்சா*
24/10/2018 

No comments:

Post a Comment

Popular Posts