
முகிழ்த்த காதலுக்கு
முதல் வார்த்தை எதுவாகவிருக்கும்?
கனவு பிரபஞ்சத்தின்
அகராதிச் சொற்குவியல்களில்
சிக்கிக் கிடக்கிறது என் ஆடைகள்...
சளக்கிடும் நீரோடியின் சங்கமம்
வெப்பமழையின் வெதுவெதுப்பின் சுகம்...
பிச்சுத் தின்னுதலின் வியர்க்கும்
எழுத்துகளில் புது வரவாய் கவிதைகள்...
நானே நீயாகி
நீ நானாகி நாமாகும் மாயப் பிரபஞ்சத்தில்
மகிழம்பூ வாசனை....
ஆமாம்...இங்கு யார் போர்வை?
ஏழாம் சுவையுணர்வின் எட்டாம் வானம்
இங்கு எப்படி இறங்கியது?
பத்துவிரல்கள் படிக்கின்ற பாடத்தில்
நீயும் நானும் எந்த அதிகாரம்?
யோகிப்பின் கூட்டிற்குள் தேகத்தை நுழைத்து
விடை தேடுவோம்....
விடியம் வராமலிருக்கப் பெரும் யாகம்.
- மு.முகமது பாட்சா*
22 /10 /2018
No comments:
Post a Comment