
அவள் தன் பெயரை
காந்தி என்று சொல்லிக் கொண்டாள்
அவளுக்குப் பிடிக்காத வார்த்தை
அகிம்சை ...
சுதந்திரம் என்பதின் விளக்கம்
'கிடைக்காதது' என்றுதான்
அவளின் அகராதி சொல்கிறது...
அவளின் கைத்தடியில் கத்தியொன்றை
சொருகியே வைத்திருக்கிறாள்...
அவளின் புன்னகை போலியானது
தேசத்தின் விலாக்கூட்டில்
இன்னமும் எத்துணைத் தடிகளை
சொருகிவைப்பீர்கள்? என்ற கேள்வி
விடையறியாதது....
அவள் அவ்வப்போது மயங்கி விழுகிறாள்
அவளை நோயாளியென்று
ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள்...
அவளை
வணங்கிவிட்டுப் போகும் தியாகிகள்
தேசத்தின் தாய் என்கிறார்கள்.
- மு.முகமது பாட்சா*
02 /10 /2018
No comments:
Post a Comment