
ஒரு களிமண்
இன்னொரு களிமண்ணுடன் காதல் கொள்கிறது
இரண்டும்
ஒன்றோடு ஒன்று பிசைந்து கொள்கின்றன
வயிறு புடைத்த களிமண்
பானையாக உருவெடுக்கலாம்
குயவன் இன்னமும் முடிவு செய்யவில்லை
நீர் தெளித்து நீர் தெளித்து அதனை நீட்டுகிறான்
கைகளை வளைத்து வனைத போது
ஒரு பதுமை தோன்றி மறைகிறாள்
அடிப்பருமனை அகலமாக்கி வாயைக் குறுக்குகிறான்
காலில்லாத கர்ப்பிணியாய்
கண் திறந்து பார்க்கிறது காதல்
உலைவெப்பம் என்பதே உருக் கொடுக்கத்தான்
இனிமேல்தான் காதலை
உடையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
- மு.முகமது பாட்சா*
27 /10 /2018
No comments:
Post a Comment