
நானும் கவிதையும்
மழைக்காக ஒதுங்கிக் கொள்கிறோம்
தேநீர்க் கடையின் வெப்பத்தை
கவிதை அருந்துகிறது
எனக்குமொரு சூடாகத் தேநீர்...
நிலவிற்கு யார் குடை பிடித்தார்கள்
வானம் இருட்டாகவே இருக்கிறது
மின்னலின் வெளிச்சத்தில்
மின்னலாக மறைகிறது ஒரு வார்த்தை
வெப்பம் சூடேற்ற
தேநீர் கோப்பையின் மேலெழும்
ஒரு பேரண்டம்
பிரபஞ்சத்தின் வாசலைத் திறக்க
உள்ளே நுழைகிறோம்
அங்குமொரு தேநீர்க் கடை
- மு.முகமது பாட்சா*
10 /08 /2018
No comments:
Post a Comment