Monday, 13 August 2018

நிர்வாணத்தவம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

ஒரு நிலையின் படியில் 
நிர்மூலமாய் உட்கார்ந்திருக்கிறேன் 
சாகரத்தின் மேற்புழையில் 
மழைத்துளிகளின் சொற்றொடர்கள் 
வனாந்தரம் பூசிய சப்தம் 
ஓய்வெடுக்கும் பறவைகளின் கூடுகள் 
செவ்வானத்தின் கீழ் 
சின்னதாயொரு கையொப்பம் 
சிருங்காரம் இழையோடும் 
சிங்காரக் காற்றின் மென்னசைவுகள் 
ஒரு பிரளயத்தின் 
பிரபஞ்ச வார்த்தைகளின் நெசவு 
நாளைதான் பிறக்கவேண்டும் 
அவளின் அணுத்துகள்களின் மூச்சில் 
அதுவரை நிலையின் படியில் 
ஒரு நிர்வாணத் தவம். 

- மு.முகமது பாட்சா* 
13 /08 /2018 

No comments:

Post a Comment

Popular Posts