
அவனை
எல்லோரும் பைத்தியமென்றார்கள்
எழுதியெழுதி
கிழித்துக் கொண்டேயிருந்தான்...
அவனது அழுக்காடையில்
சில வன்சொற்கள் உட்கார்ந்திருந்தன
அவனிப்போது
நூற்றாண்டுகள் கடந்து வாழ்கிறான்
அவன் யுகத்தின் பரிணாமத்துகள்களில்
யாருக்கும் இடமில்லை
வலிகளையெல்லாம் கடந்துவிட்டான்
போதிமரம்
அவன் காலடியில் தவம் கிடக்கிறது
அவனெழுதிய கவிதைகளை
யாருக்கும் வாசிக்க அருகதையில்லை
அவனென்பது
அவன் மட்டுமில்லையென்பது
இங்கு எத்துணைப் பேருக்குத் தெரியும்?
- மு.முகமது பாட்சா*
01 /09 /2018
No comments:
Post a Comment