
எல்லோருமே ஒரு கூட்டிற்குள்ளேறி
உட்கார்ந்து கொண்டார்கள்
கூடு இப்போது
பறக்குமென்று ஜபிக்கப்பட்டது
கூடும்
வானத்தை நோக்கிப் பறந்து சென்று...
ஏழாம் வானத்தைக் கடந்த பிறகு
ஆதாமின் ஆப்பிள் மரம்
இதுதானென ஒருவன் கைகாட்டினான்
அலங்கரிக்கப்பட்ட வாசலைக் காட்டி
ஒருவன்
இதுதான் நரகமாக இருக்கும் என்றான்
தொங்கும் கோளைக் காட்டியவன்
இதுதான்
திரிசங்கின் சுவனமென்றான்
கூடு மெல்ல புகையத் தொடங்கி
பற்றியெரிய.....
எல்லோரும்
கீழே குதித்த பிறகுதான் தெரிந்தது
பூமி எரிந்துவிட்டிருந்தது.
-மு.முகமது பாட்சா*
29 /08 /2018
No comments:
Post a Comment