
அந்தக் கவிதை
ஒரு மலையைச் சுமந்திருந்தது...
பறவைகளெல்லாம்
வார்த்தைகளாகப் பறந்து மகிழ்ந்தன...
அருவியொழுக்கில் ஆர்ப்பரித்த வார்த்தைகள்
குளுமைக் காற்றைச் சுமந்து வந்தது
ஒரு பரிணாமத்தினுடைய வரலாறுகள்
அங்குதான் மேய்ந்து கொண்டிருந்தன...
நீங்கள் அதை விலங்குகளென்றீர்கள்
அவையோ 'நீங்களெல்லாம்
இங்கிருந்து விலகுங்கள்' என்றன...
வாசகனாய் நுழைந்தவர்கள்
வார்த்தைகளை ரசிப்பதற்குப் பதிலாகச்
சுவைக்கத் தொடங்கினீர்கள்
மலையை உடைத்து
ரெசார்ட்டுகளை எழுப்பிக் கொண்டீர்கள்...
கவிதை இப்போது
கரை புரண்டோடுகிறது....
ஆனாலும் வார்த்தைகளைப் படிக்காமல்
வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
- மு.முகமது பாட்சா*
20 /08 /2018
No comments:
Post a Comment