Saturday, 4 August 2018

நட்பு தினம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

முதலெழுத்தின் அடுத்தெழுத்து நீ 
அடுக்குமாடியென்று புகழ்கிறாய் 
அத்திவாரமாய் நீயிருக்கிறாய்... 
பூந்தோட்டத்தில் 
கை குலுக்கிக் கொள்கிறோம் 
பட்டாம் பூச்சிகளின் சந்தோசமாய் 
ஒளிர்கிறது நமது சிறகுகள் 
என் கண்களில் விழும் தூசிக்கு 
அடிக்கடிக் கலங்குகிறாய்? 
நாம் ஒட்டாத உதிரத்தின் ஒரே முகமூடி 
ஒவ்வாமை வீட்டினுள் நுழையாது 
பட்டத்துடன் பறப்பது நேசம் 
பாசாங்கிற்கு ஏதுமில்லை வேசம் 
நட்பிற்கு ஒருதினமாம் வேடிக்கை! 
நாளெல்லாம் நம் தினம்தான் கேளிக்கை... 

- மு.முகமது பாட்சா*
05 /08 /2018

No comments:

Post a Comment

Popular Posts