Friday, 17 August 2018

ஆறாவது விரல்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

அந்த இரவுக்கவிதை 
நீண்டு கொண்டே செல்கிறது... 
அது தொடங்கிய புள்ளியில் 
ஒரு சிற்றாறு ஓடிக் கொண்டிருக்க 
அதன் வழியாக நீந்திக் கரை சேர்கிறேன் 
விடியலின் வெளிச்சம் 
சாளரத்தின் வழியே எட்டிப் பார்க்க 
படுக்கையறை களவாடப்பட்டிருந்தது! 
எழுதாத வெள்ளைத் தாளாய்ப் பூத்திருக்கும் 
ஒற்றை ரோஜா... 
விளையாடிக் கொண்டிருக்கும் 
சிறுமியின் பார்வையைப் பறித்துக் கொள்ள 
ருசியறியாமல் தேநீர் கோப்பையை 
அருந்திக் கொண்டேயிருக்கிறேன்.... 
என் பார்வையின் ஒளியை 
விரல்கள் திருடிக் கொண்டனவென்று 
கவிதையின் ஆறாவது விரல் சொல்கிறது! 
நான் 
பிணமாகவே இருப்பது யாருக்குத் தெரியும்? 
கவிதை முடியட்டும் 
மீண்டும் உயிர் பெற்று எழுகிறேன். 

- மு.முகமது பாட்சா* 
17 /08 /2018 

No comments:

Post a Comment

Popular Posts