Wednesday, 8 August 2018

ஓய்வெடு தலைவா!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், தொலைபேசி, குளுமையை உணரவைக்கும் கருப்பு கண்ணாடிகள் மற்றும் குளோஸ் அப்

இரங்கற்பா எதற்குத் தலைவா... 
நீ குழியில் இறங்கியதற்கா? 
உறங்காது விழித்திருந்தோம் உன்னருகில் 
நீ போகும் கடைசி ஊர்வலம் காண்பதற்கு 
இறந்தாலும் மீண்டும் எழுவதற்குத்தான் 
உன் எழுத்துகளை இங்கு விதைத்தாயோ! 
இரவல் வாங்கியதை 
அதிக நாள் வைத்துக் கொண்டேன்... 
கொடுத்துவிட்டு வருகிறேனெனச் சென்றுவிட்டாயா? 
மோதிரத்திலா வைத்திருந்தாய் இதயத்தை? 
அண்ணாவின் 
மோதிரத்திலா வைத்திருந்தாய் இதயத்தை? 
கழற்றாமல் எடுத்துச் சென்றாய் 
- நீ மகா கண்ணியன் - 
வாசிக்கத் தெரிந்தவன் நீ 
உன் வசிப்பிடத்தை விட்டாக் கொடுப்பாய்... 
வாங்கிவிட்டாய்ப் போராடி 
நீதானே உண்மையில் போராளி 
கட்டுமரம் கடலின் மீதுதான் மிதந்து சென்றது... 
ஆம் கட்டுமரம் 
மக்கள் கடலின் மீதுதான் மிதந்து சென்றது 
இங்கும் உப்புத் தண்ணீர்தான். 
ஆனாலும் வங்கக்காற்று உனக்கு எப்போதும் வீசும். 
ஓய்வெடு! நன்றாக ஓய்வெடு
உன்னெழுத்துகளை பிடித்து எழுந்து கொள்கிறோம்.

- மு.முகமது பாட்சா* 
09 /08 /2018 

No comments:

Post a Comment

Popular Posts