
எழுதுகோல்களின் மந்திரம்
எழுத்துகள்தான்
விரல்கள் உருட்டுகின்றன ஜபத்தை
வெள்ளைத்தாள்
தன்னையே நிரப்பிக் கொள்கிறது
வார்த்தைகள் உயரே பறக்கின்றன
அடைகாத்தக் கூட்டில்தான்
எத்துணை அழகான குஞ்சுகள்....
புங்கை மரத்துக் காற்றின் குளுமை
சில்லென்று இறங்கிவரும் மேகம்
உறக்கம் தொலைத்துவிட்ட ஞானம்...
எழுத்துகளோடு
பேசிக்கொள்கிறது தூரிகை
வண்ணம் கூட்டும் வாசத்தின் நடுவே
ஏதோ ஒரு துர் நாற்றம்....
எங்கோ சில துப்பாக்கிகளின் ஓசை...
விடாது கேட்கும் அழுகுரல்கள்...
புழுக்கத்திலிருக்கின்ற
வார்த்தைகளின் எழுத்துகள்....
எழுதாத பேனாக்களைச் சபிக்கும்
புத்தனின் சவம்...
வறுமையின் வயிறுகள்
பசியை மட்டுமே
சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன...
அங்கே இரைந்து கிடக்கும் எழுத்துகளை
தீ மூட்டிக் கொளுத்துங்கள்
சுகாதாரத்திற்கு அதுதான் மிகவும் நல்லது.
- மு.முகமது பாட்சா*
31 /08 /2018
No comments:
Post a Comment