
கி.மு வின் கல்லறையொன்றை
பூமிக்கடியில் மீட்டார்கள்...
அதன் நீளம் சற்றேறக்குறைய எட்டடி
வேலைப்பாடுடைத்த படிகம்
பெரும் மன்னனாக இருக்கலாம்...
இல்லையில்லை இல்லவேயில்லை
சில குறியீடுகள்
மதம் சார்ந்த தீர்க்கன் என்றொரு வாதம்
அருகிலிருந்த கல் ஈட்டி
மறவன்தான் இவனோ என வியப்பு
உடைத்த பின் தெரிந்தது
ஒரு குரங்கின் எலும்புக்கூடு
அதனருகில் பழம் மது போத்தல்....
அது கடவுளென்று
சிலர் இப்போது பேசிக் கொண்டிருந்தார்கள்.
- மு.முகமது பாட்சா*
28 /08 /2018
No comments:
Post a Comment