
எதுவும் எளிதல்ல கடந்து செல்வதற்கு
எழுத்தாணியின் முனை சற்றே வளைந்திருக்கிறது
எழுதாத அந்தப் பக்கங்களை
யாராலும் எளிதில் எழுதிவிட முடியாது...
மனம் சமாதானக்குதிரையில் பயணிக்கிறது
பயணியோ கீழே விழுந்து கிடக்கிறான்
மூப்பிற்கு முகவுரை அவசியமில்லை
காற்றொன்று இப்போது தேவைப்படுகிறது
கீழேயிறங்க துடிக்கும் அந்தச் சருகிற்கு
காலத்தச்சனின் சக்கரம்
யாருக்காகவும் நிற்பதில்லை...
இன்றும் நாளையும் அதனிரு அச்சாணிகள்
காலத்தின் கண்களில்
கண்ணீரென்பதே கிடையாது...
அதன் கடிகார முட்கள் காலொடிந்தும் நிற்பதில்லை
நாம் மட்டும்தான் அழுகிறோம் சிரிக்கிறோம்
நம் நிழல்?
- மு.முகமது பாட்சா*
07 /08 /2018
No comments:
Post a Comment