
இரவின் கைகளில்
தேசியக்கொடி அசைந்து கொண்டிருக்கிறது
நிழல் தலைவர்கள்
தேசத்தை நிமிர்த்துக் கட்டுகிறார்கள்
வல்லூறுகளின் கனவுகள் வாய்க்குமென்று
பட்சிசாத்திரன்
ஜாமமுழக்கம் செய்கிறான்...
விரல்களுக்குள்
விரல்கள் கோர்த்த பிரச்சனைகள்
விடுதலைப் பெறாமல் காத்துக் கிடக்கின்றன..
மயக்கமருந்திய மண்டைகள்
மயானத்தில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருக்க
புதைகுழிகளுக்குள்
தேசத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான்
தொல்பொருள் ஆராய்ச்சியாளன்...
- மு.முகமது பாட்சா*
14 /08 /2018
No comments:
Post a Comment