
காதலே! மொழியினழகை
நேர்த்தியாக உள் வாங்கிக் கொள்கிறாய்
பந்தமென்பது உறுதியான மதிலும்தான்
கைப் பிடித்த கைகளுக்குள் உறங்கிக் கொள்வது
வாழ்க்கையின் வசந்தகாலம்
உன்னிரவுகளையும்
நான்தான் தூங்கிக் கழித்திருக்கிறேன்
உன் பகல்களையும்
நான்தான் பங்கிட்டுக் கொள்கிறேன்....
காதலென்ற வார்த்தை
கடைசிவரை வருவதாகும்...
உறவுகளின் சங்கிலிகளை
உன்னால் மட்டுமே ஒட்டிவைக்க முடிகிறது
புன்னகைகளை
அடிக்கடி மோதவிட்டுக் கொள்கிறோம்
பொல்லாங்குக் கோபங்கள்
தானாகவே மோதிப் பார்த்து விழுகின்றன...
காதலே!
பந்தமென்பது உறுதியான மதிலும்தான் .
- மு.முகமது பாட்சா*
19 /08 /2018
No comments:
Post a Comment