
தெளிவில்லாமல் திரிபவள்
பெரும் கதைகளின்
நூலகத்தைப் பூட்டி வைத்திருக்கிறாள்
நிமிர்ந்து திமிரும் சதைகளுக்குப் பின்னால்
கிழிந்த இதயமொன்று
தைக்கப்படாமல் சிதைந்திருக்கிறது
கிழிந்த ஆடைகளில் அவளின் கதை
சிதையாமலிருக்கிறது...
சபிக்கப்பட்ட உலகத்தை விட்டு
வெளியேறிவிட்டாள் ஈவா
சர்ப்பம்
அவள் தொடைகளைப் பின்னி நகர்கிறது
அவளின் உலகம் அவள் சமைத்தது
அவள்தான் ராணி அவள்தான் குடிமக்கள்
தண்டனையும் அவளே தருபவளும் அவளே
சக்தியும் அவளே சாந்தமும் அவளே
காமுகன் புணர்ந்தது கொடும் மிருகம்
அவள் புணர்வது மகா யோகம்
இருட்டும் அஞ்சும் மாச்சாம்பல்காரி
சுற்றி நின்று சிரிப்பது மயானத்து ஒப்பாரி.
- மு.முகமது பாட்சா*
04 /08 /2018
No comments:
Post a Comment